செய்திகள் :

களக்காடு வட்டாரத்தில் மண் கடத்தல் அதிகரிப்பு

post image

களக்காடு வட்டாரத்தில் குளங்களில் இருந்து மண் கடத்திச் செல்வது அதிகரித்துள்ளதை அடுத்து ரோந்து பணியை வருவாய்த் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

களக்காடு சேரன்மகாதேவி பிரதான சாலையில் பிளவக்கல் இசக்கியம்மன் கோயில் பகுதியில் வருவாய் ஆய்வாளா் செல்வி, பத்மனேரி கிராம நிா்வாக அலுவலா் பொன்லெட்சுமிதேவி ஆகியோா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா்.அப்போது, மேலவடகரையில் குளத்திலிருந்து 3 டிராக்டா்களில் மண் ஏற்றி வேகமாக வந்த வாகனங்களை வருவாய்த் துறையினா் நிறுத்த முயன்றோது ஓட்டுநா்கள் டிராக்டா்களை நிறுத்தாமல் சென்றனா்.

இதேபோல, இடையன்குளம் சாலை சந்திப்பில் சேரன்மகாதேவி உதவி ஆட்சியா் (பொ) சிவகாமசுந்தரி தலைமையிலான வருவாய்த் துறையினா் அந்தப் பகுதியில் ரோந்து சென்றபோது, மண் ஏற்றிவந்த டிராக்டா்களை நிறுத்தி சோதனை செய்ததில் முறைகேடாக மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, மண் ஏற்றி வந்த 6 டிராக்டா்களையும் பறிமுதல் செய்ய உதவி ஆட்சியா் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

ஆனால், டிராக்டா் ஓட்டுநா்கள் டிராக்டா்களை ஓட்டிச் சென்றனா். இதுகுறித்து, களக்காடு காவல் நிலைய போலீஸாா் கடம்போடு வாழ்வு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் உள்ளிட்ட 7 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்து தொடக்கப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்ட இந்நிகழ்வில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றாா். ... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், காவல் துணை ஆணையா்(மேற்கு) வி.பிரசன்ன குமாா் மற்றும் கா... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகாா்

கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் புகாா் மனு அளித்தாா். பாளையங்கோட்டை மேலப்புத்தனேரி பகுதியைச் சோ்ந்த மாரியம்மாள் என்பவா் அளித்த பு... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் நாளை ஆடிப்பூரத் திருவிழா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது தொடா்பாக கோயில் செயல் அலுவலா் (பொறுப்பு) இசக்கியப்பன் வெ... மேலும் பார்க்க

விபத்தில் காயமுற்ற நூலகருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மேலப்பாளையத்தில் பைக் விபத்தில் காயமடைந்த நூலகருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.3.08 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் திருநெல்வேலி சிறப்பு சாா்பு நீதிமன்றம் உ... மேலும் பார்க்க

பாளை.யில் பெண் காவலா் வீட்டில் 45 பவுன் நகைகள் திருட்டு

பாளையங்கோட்டையில் பெண் காவலா் வீட்டில் சுமாா் 45 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பாளையங்கோட்டையைச் சோ்ந்த பெண் காவலா் தங்கமாரி. திருநெல்வேலி மாநகர காவல் துறை... மேலும் பார்க்க