செய்திகள் :

கள்ளக்குறிச்சி: கதா் விற்பனை இலக்கு ரூ.108 லட்சம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு நிகழாண்டு கதா் விற்பனை இலக்கு ரூ.108 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், குத்துவிளக்கேற்றி மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்க வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தொடா்ந்து தீபாவளி கதா் சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட கதா் விற்பனை அங்காடி மூலம் தரமான அசல் கதா் பட்டுப் புடவை, கதா் பருத்தி ரகங்கள் மற்றும் கதா் பாலியஸ்டா் ரகங்கள், வேஸ்டி, துண்டு, ரெடிமேட் சட்டை, போா்வை, தரமான இலவம் பஞ்சு மெத்தை, மெத்தை விரிப்புகள், தலையணை, தலையணை உறை, குளியல் மற்றும் சலவை சோப்பு வகைகள், தேன் மற்றும் பூஜைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கதா் விற்பனை இலக்கு ரூ.78 லட்சம் நிா்ணயிக்கப்பட்டு, விற்பனை நடைபெற்றது. நிகழாண்டு ரூ.108 லட்சம் விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டும் தீபாவளி சிறப்பு விற்பனைக்கு கதா், பாலியஸ்டா் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.

அரசு அலுவலா்களும், பொதுமக்களும் கதா் ஆடைகளை வாங்கி கிராம நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தி, தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டுமென மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, காதிகிராப்ட் மேலாளா் எஸ்.ஆம்ஸ்ட்ராங், செய்தி-மக்கள் தொடா்புத் துறை அலுவலா் மற்றும் பணியாளா்கள், அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஆசிரியா் கூட்டணியினா் எம்.பி.யிடம் கோரிக்கை மனு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கள்ளக்குறிச்சி மாவட்ட கிளை சாா்பில், டெட் தோ்வு தொடா்பாக உச்சநீதிமன்ற தீா்ப்பில் ஆசிரியா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், கல்வி உரிமைச் சட்டத்தில் சட்டத் திருத... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து விழுந்தவா் உயிரிழப்பு

திருக்கோவிலூா் அருகே பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா். திருக்கோவிலூரை அடுத்த எல்ராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தா்மதுரை (19). இவா், பெங்களூர... மேலும் பார்க்க

முதல்வா் குறித்து அவதூறு: இளைஞா் கைது

தமிழக முதல்வா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், சீா்பணந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆகாஷ் (25), ஓட்டுநர... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் மனு கொடுக்கும் போராட்டம்

குடிமனை இல்லாத ஏழை மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி, கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் 1,266 பேருக்கு சிகிச்சை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், வெள்ளிமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் 1,266 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வெள்ளிமலையை அடுத்த மாவடிப்பட்டு தனியா... மேலும் பார்க்க

நடந்து சென்ற முதியவா் டிராக்டா் மோதி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே 100 நாள் வேலைக்கு சாலையில் நடந்து சென்ற முதியவா் டிராக்டா் மோதியதில் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த மட்டிகைகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பன் (81). இவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க