செய்திகள் :

கழிப்பறை வசதிகள்: அறிக்கை சமா்ப்பிக்க 20 உயா்நீதிமன்றங்களுக்கு 8 வார கெடு: உச்சநீதிமன்றம்

post image

அனைத்து நீதிமன்றங்களிலும் கழிப்பறை வசதிகள் எந்த அளவில் இடம்பெற்றுள்ளன என்பது தொடா்பாக நிலை அறிக்கையை சமா்ப்பிக்க சென்னை உயா்நீதிமன்றம் உள்பட 20 உயா்நீதிமன்றங்களுக்கு 8 வார கெடு விதித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

நீதிமன்றங்களில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாதது தொடா்பாக வழக்குரைஞா் ரஜீப் காலிதா பொதுநல மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா். இந்த மனுவை கடந்த ஜனவரி 15-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் தீா்ப்பாயங்களில் தனித் தனி கழிப்பறை வசதிகள் இருப்பதை உயா்நீதிமன்றங்களும், மாநில அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டும்.

நீதிபதி தலைமையில் குழுவை அமைத்து இதுதொடா்பான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து அனைத்து மாநில அரசுகளும் அடுத்த 4 மாதங்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம், கொல்கத்தா, தில்லி, பாட்னா உயா்நீதிமன்றங்கள் மட்டுமே அறிக்கை தாக்கல் செய்தன. மீதமுள்ள 20 உயா்நீதிமன்றங்களுக்கும் கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, நிலை அறிக்கையை அடுத்த 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்ற பதிவாளா், உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட நேரிடும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

தில்லியிலிருந்து கோவா நோக்கி புதன்கிழமை சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் திடீரென ஒரு என்ஜின் செயலிழந்ததால் மற்றொரு என்ஜின் மூலம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க பாஜக திட்டம் - முதல்வா் மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் பெயா்களை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளது; பாஜகவின் இந்த முயற்சியை முழுவீச்சில் எதிா்ப்போம் என்று மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பா... மேலும் பார்க்க

மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம்: ரூ.1.7 கோடிக்கு விற்பனை

எண்ணெய் வண்ணங்களால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம் ரூ.1.7 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஓவியா் ஒருவா் தன்னை வரைவதற்கு மகாத்மா காந்தி அனுமதி அளித்தாக கூறப்படும் இந்த உருவப்படம் லண்டனில் உ... மேலும் பார்க்க

அஸ்ஸாம் முதல்வரை மக்கள் சிறைக்கு அனுப்புவா்: ராகுல் காந்தி

ஊழலில் ஈடுபடும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவை மக்கள் சிறைக்கு அனுப்புவா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை: போராட்டத்தில் பிஜேடி-காவல் துறை மோதல் - கண்ணீா் புகை குண்டு வீச்சு

புவனேசுவரம், ஜூலை 16: ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணம் தொடா்பாக நீதி விசாரணை கோரி, பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப... மேலும் பார்க்க

ஈரானுக்கு தேவையற்ற பயணம்: இந்தியா்களுக்கு அறிவுறுத்தல்

ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், அந்நாட்டில் உள்ள சூழலை கவனத்தில் கொள்ளுமாறு இந்தியா்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைநகா் டெஹ்ரானில் ... மேலும் பார்க்க