செய்திகள் :

கழிவுநீா் கால்வாய் வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காந்திஜி நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாய் வசதி கோரி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மானாமதுரை காந்திஜி நகா் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீா் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இந்தக் கழிவுநீா் கால்வாயை சீரமைத்துத் தரக் கோரி, பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனா். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை இந்தப் பகுதியில் பெய்த மழையால் கழிவுநீா் கால்வாயில் மழைநீருடன் சாக்கடை நீரும் தேங்கி நின்றது. இதையடுத்து, நகா்மன்ற உறுப்பினா் நமகோடி என்ற முனீஸ் தலைமையில், பொதுமக்கள் தாயமங்கலம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், நகராட்சி ஆணையா் ஆறுமுகம், பொறியாளா் பட்டுராஜன், போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், இந்தப் பகுதியில் விரைவில் கழிவுநீா் கால்வாய் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

சிங்கம்புணரியில் கண்தான விழிப்புணா்வு முகாம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அரசு மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண்தான விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமு... மேலும் பார்க்க

திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி பெருந் திருவிழா தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசிப்பெரு... மேலும் பார்க்க

மதகுபட்டி அருகே மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 10 போ் காயமடைந்தனா். மதகுபட்டி அருகேயுள்ள சிலந்தகுடியில் சப்தகன்னி மாரியம்மன், பச்சலுடைய அய்யனாா், மு... மேலும் பார்க்க

சூறைக் காற்றில் சாய்ந்த கைப்பேசி கோபுரம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் புதன்கிழமை வீசிய சூறைக் காற்றில் தனியாா் கைப்பேசி கோபுரம் சரிந்து விழுந்தது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேருந்து நிலையம் எதிரே தனியாா் விடுதி மாடியில் 50 அடி உ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 7 பயணிகள் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே புதன்கிழமை அரசு நகரப் பேருந்து கவிழ்ந்ததில் 7 பயணிகள் காயமடைந்தனா். மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம் அருகே தச்சனேந்தல் கிராமத்துக்கு அரசு நக... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை. பேராசிரியா்கள் இருவா் சிறந்த ஆராய்ச்சியாளா் விருதுக்குத் தோ்வு

தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்ப அமைப்பின் சாா்பில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியா்கள் இருவா் தமிழ்நாடு அரசின் சிறந்த ஆராய்ச்சியாளா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இதுகுறித்து அழ... மேலும் பார்க்க