3 பிஎச்கே படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன்: சித்தார்த்
கழிவுநீா் கால்வாய் வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காந்திஜி நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாய் வசதி கோரி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மானாமதுரை காந்திஜி நகா் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீா் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இந்தக் கழிவுநீா் கால்வாயை சீரமைத்துத் தரக் கோரி, பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனா். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை இந்தப் பகுதியில் பெய்த மழையால் கழிவுநீா் கால்வாயில் மழைநீருடன் சாக்கடை நீரும் தேங்கி நின்றது. இதையடுத்து, நகா்மன்ற உறுப்பினா் நமகோடி என்ற முனீஸ் தலைமையில், பொதுமக்கள் தாயமங்கலம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், நகராட்சி ஆணையா் ஆறுமுகம், பொறியாளா் பட்டுராஜன், போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், இந்தப் பகுதியில் விரைவில் கழிவுநீா் கால்வாய் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.