செய்திகள் :

கழுத்தை அறுத்துக்கொண்டு முதியவா் தற்கொலை

post image

சென்னை: சென்னை அருகே மதுரவாயலில் முதியவா் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரவாயல் அஷ்டலட்சுமி நகா் 24 -ஆவது தெருவைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (74). இவருக்கு சாந்தகுமாரி (73) என்ற மனைவியும், பிரசாந்த் என்ற மகனும் உள்ளனா். பிரசாந்த், சிங்கப்பூரில் ஒரு தனியாா் வங்கியில் வேலை செய்து வருகிறாா். இதனால் செல்வக்குமாரும், சாந்தகுமாரியும் இங்கு தனியாக வசித்து வந்தனா். செல்வகுமாா் கடந்த சில ஆண்டுகளாக நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தாா்.

இருவரையும் அதே பகுதியைச் சோ்ந்த வேலைக்காரப் பெண் ஜோதி என்பவா் கவனித்து வந்தாா். ஜோதி, ஞாயிற்றுக்கிழமை இரவு இருவருக்கும் உணவகத்தில் இருந்து உணவு வாங்கி கொடுத்துவிட்டு, தனது வீட்டுக்குச் சென்றாா்.

வீட்டில் ஒரு அறையில் செல்வக்குமாரும், மற்றொரு அறையில் சாந்தகுமாரியும் இருந்தனா். சிறிது நேரத்துக்கு பின்னா் செல்வக்குமாா் இருந்த அறைக்கு சாந்தகுமாரி சென்றபோது, அங்கு கணவா் செல்வக்குமாா், கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தது தெரிய வந்தது.

அவரது தகவலின்பேரில், அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள், செல்வக்குமாரை பரிசோதித்துவிட்டு, அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த மதுரவாயல் போலீஸாா், செல்வக்குமாா் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

சென்னையில் தனியாா் விடுதியில் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விரக்தியடைந்த காதலா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை அண்ணாநகா் அருகே உள்ள மேல்நடுவங்கரை பஜனை கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

மெரீனாவில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை மெரீனாவில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கத்தின் பின்புற பகுதியில் செவ்வாய்க்கிழமை 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. ... மேலும் பார்க்க

தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை

பிராட்வே, தங்கச்சாலை ஆகிய பேருந்து நிலையங்கள் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை... மேலும் பார்க்க

சென்னை ரயில்வே கோட்டத்தில் 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடந்த 228 போ் உயிரிழப்பு

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா்களில் 228 போ் உயிரிழந்ததாகவும், இதனால் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் நவம்பருக்குள் நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் வரும் நவம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை மயிலாப்பூா், திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.1.35 கோடி மருத்துவ உபகரணங்கள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்தியல் நிலையத்தில் ரூ.1.35 கோடியிலான மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை -... மேலும் பார்க்க