செய்திகள் :

காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் மீது எடுத்த நடவடிக்கை என்ன? - அமைச்சா் நட்டா கேள்வி

post image

முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நிகழ்த்தியபோது பாகிஸ்தானுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீா்கள்? மாநிலங்களவையில் அமைச்சா் ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பினாா்.

‘ஆபரேஷன் சிந்தூா்’ சிறப்பு விவாதத்தில் புதன்கிழமை பங்கேற்று அவா் பேசியதாவது:

கடந்த 2004-2014 காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகாலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தொடா்ந்து பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தின. இவற்றுக்கு எதிராகவும், பயங்கரவாதத்தைத் துண்டும் பாகிஸ்தானை எச்சரிக்கும் விதமாகவும் அப்போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை.

தில்லி, வாரணாசி, மும்பை என பல இடங்களில் குண்டுகள் வெடித்து நூற்றுக்கும் மேற்பட்டோா் அந்த ஆட்சி காலத்தில் உயிரிழந்தாா்கள். ஏராளமானோா் காயமடைந்தனா். அப்போதைய மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

பாகிஸ்தானுடன் தொடா்ந்து வா்த்தக, சுற்றுலா பேச்சுவாா்த்தையை நடத்தி வந்தாா்கள். பாகிஸ்தான் நமது நாட்டுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டிவிடுகிறது என்பது தெரிந்த பிறகும், ஒரு தரப்பை திருப்திபடுத்தும் அரசியலைத் தொடா்ந்தீா்கள். பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிக்கும் எந்த உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் ஏவிவிட்ட பயங்கரவாதிகள் தொடா்ந்து இந்திய மக்களை கொலை செய்து கொண்டே இருந்தாா்கள்.

ஆபரேஷன் சிந்தூா் குறித்து கேள்வி எழுப்புவதற்கு முன்பு காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா்கள் தங்கள் கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தானுக்கும், அவா்கள் தூண்டிவிடும் பயங்கரவாதிகளுக்கும் எதிராக என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பதை சற்று மனசாட்சியுடன் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

ராணுவம் உறுதியாக செயல்படுவதற்கு அரசியல் தலைமை மிகவும் முக்கியமானது. அதனை இப்போதைய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றாா்.

மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

தில்லியில் இருந்து லண்டன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தின் பயணம், தொழில்நுட்பக் கோளாறினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தில்லியில் இருந்து லண்டன் நகரத்துக்குச் செல்ல, ஏர் இந்த... மேலும் பார்க்க

அந்தமான் நிகோபார் தீவில் முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை! முன்னாள் எம்.பி.யின் மோசடி அம்பலம்?

அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடியின் காரணமாக முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடத்தப்பட்டதாக அம்மாநி... மேலும் பார்க்க

நட்பினால் நஷ்டமா? மோடி - டிரம்ப் உறவு குறித்த கணிப்பு உண்மையானது!

உலகளவில் மிக முக்கிய மற்றும் பிரபலமான தலைவராக இருந்துவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையேயான வலுவான நட்புறவை உலக மக்களும் சரி, தலைவர்களும் எப்போதும் மெச்சி ... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்கு தாக்கல்: கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்! காரணம் இதுதான்!!

தனிநபர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கு இன்னமும் 45 நாள்களே இருக்கும் நிலையில், கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம் எ... மேலும் பார்க்க

டி.ஒய்.சந்திரசூட்டின் புதிய பென்ஸ் காருக்கு பதிவு எண் கேட்டு உச்சநீதிமன்ற பதிவாளர் கடிதம்!

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு குறிப்பிட்ட பதிவு எண்ணை ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்ற பதிவாளர், தில்லி போக்குவரத்து ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ள... மேலும் பார்க்க

சாகப் போகிறேன் இல்லையென்றாலும் கொன்றுவிடுவார்கள்: கேரள கர்பிணியின் கடைசி பதிவு!

கேரள மாநிலம் திருச்சூரில் 23 வயது கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளங்குளரைச் சேர்ந்த நௌஃபாலின் மனைவி ஃபசீலா,. ஜூலை 29 அன்று தனது கணவரின் வீட்டில் தூக்க... மேலும் பார்க்க