செய்திகள் :

டி.ஒய்.சந்திரசூட்டின் புதிய பென்ஸ் காருக்கு பதிவு எண் கேட்டு உச்சநீதிமன்ற பதிவாளர் கடிதம்!

post image

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு குறிப்பிட்ட பதிவு எண்ணை ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்ற பதிவாளர், தில்லி போக்குவரத்து ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் 2 ஆண்டுகள் பணிக்குப் பிறகு கடந்த 2024 நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

அயோத்தி வழக்கு, அரசியலமைப்பின் 370-வது பிரிவு உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இவர் ஓய்வு பெற்றும் அரசு பங்களாவை இன்னும் காலி செய்யாதது குறித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

இந்நிலையில் டி.ஒய்.சந்திரசூட் புதிதாக மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு அவர் கேட்டுள்ள குறிப்பிட்ட பதிவு எண்ணை வழங்கும்படி உச்சநீதிமன்ற பதிவாளர், தில்லி போக்குவரத்து ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் முன்னாள் தலைமை நீதிபதியின் காருக்கு அந்த எண்ணை விரைவாக ஒதுக்கீடு செய்து அவருக்கு தகவல் தெரிவித்தால் நான் நன்றியுள்ளவராக இருப்பேன் என்று கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தக் கடிதம் ஜூலை 28 அன்று அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் தலைமை நீதிபதியின் காருக்கு பதிவு எண் கேட்டு உச்சநீதிமன்ற பதிவாளர் கடிதம் எழுதியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

SC registrar writes to transport commissioner seeking specific number for ex-CJI Chandrachud's car

செய்யறிவால் பறிபோகும் வேலை வாய்ப்புகளின் பட்டியல்! மைக்ரோசாஃப்ட் ஆய்வு

செய்யறிவு என்பது, ஏதோ ஓரிடத்தில் இருந்துகொண்டு நமக்காக வேலை செய்யும், நம் வேலையை எளிதாக்கும் என்று மனிதர்கள் நினைத்திருந்த நிலையில், நம் வேலையையே அழித்தொழித்துவிடும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்ட... மேலும் பார்க்க

அனில் அம்பானி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

தொழிலதிபர் அனில் அம்பானி நேரில் ஆஜராவதற்கு அழைப்பு விடுத்து அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.யெஸ் வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூ.3,000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும்... மேலும் பார்க்க

புதிய விதிமுறை அமல்! ஜிபே, போன்பே பயனர்கள் கவனத்துக்கு...

ஜிபே, போன் பே போன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.கடந்த ஏப்தல் - மே மாதங்களில் டிஜிட்டல் பணப்... மேலும் பார்க்க

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரியாவு உருளை விலை ரூ.1,789 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வா்த்தக சமையல் எரியாவு உருளை ஒன்றின் விலை ர... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவையில் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு!

மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது ஆன்லைன் ரம்மி விளையாடிய சர்ச்சையில் சிக்கிய அமைச்சா் மாணிக்ராவ் கோகடே, வேளாண் துறையில் இருந்து விளையாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.மகாராஷ்டிர சட்டப்பேரவை... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமா் ஆலோசனை

ஐக்கிய அரபு அமீரக அதிபா் முகமது பின் சையது அல் நஹ்யானுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வழியில் வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளி... மேலும் பார்க்க