செய்திகள் :

சாகப் போகிறேன் இல்லையென்றாலும் கொன்றுவிடுவார்கள்: கேரள கர்பிணியின் கடைசி பதிவு!

post image

கேரள மாநிலம் திருச்சூரில் 23 வயது கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளங்குளரைச் சேர்ந்த நௌஃபாலின் மனைவி ஃபசீலா,. ஜூலை 29 அன்று தனது கணவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கணவர் நௌஃபால், மாமியார் ரம்லாவை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் வரதட்சணை கொடுமையே அவரது தற்கொலைக்குக் காரணம் எனத் தெரிய வந்ததுள்ளது. வரதட்சணை கேட்டு ஃபசீலாவின் கணவரும், மாமியாரும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

உச்சக்கட்டத்தில் கொடுமை தாள முடியாமல் கர்ப்பிணிப் பெண்ணான ஃபசீல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். கடைசியாக தன் தாய்க்கு வாட்ஸ்ஆப் மூலம் செய்தி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

ஃபசீல் அனுப்பிய வாட்ஸ் ஆப் செய்தியில்,

தான் இரண்டாவது முறையாகக் கர்ப்பமாக இருப்பதாகவும், கணவர் தனது வயிற்றில் பல முறை உதைத்து கையை உடைத்ததாகவும் தனது மாமியார் தன்னைத் துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அம்மா "நான் சாகப்போகிறேன் இல்லையென்றால் அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்" என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

பெண்ணின் உறவினர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஃபசீலா தனது குடும்பத்தினரிடம் ஏற்கெனவே தன் கணவர் வீட்டில் கொடுமை செய்வதாக சொல்லியிருக்கிறாள். ஆனால் பெற்றோர்கள் இதுபோன்ற பிரச்னைகள் ஒவ்வொரு வீட்டிலும் நிகவது தான். பொறுத்துக்கொண்டு செல்லுமாறு மகளுக்கு அறிவுரை கூறி அனுப்பியதாக அவர் கூறினார்.

தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருச்சூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் விசாரணை நடைமுறைக்குப் பிறகு, ஃபசீலாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

A 23-year-old pregnant woman allegedly died by suicide at her husband’s residence in Thrissur on Tuesday after prolonged domestic violence at the hands of her husband and his mother, a chilling message she sent to her mother has revealed.

செய்யறிவால் பறிபோகும் வேலை வாய்ப்புகளின் பட்டியல்! மைக்ரோசாஃப்ட் ஆய்வு

செய்யறிவு என்பது, ஏதோ ஓரிடத்தில் இருந்துகொண்டு நமக்காக வேலை செய்யும், நம் வேலையை எளிதாக்கும் என்று மனிதர்கள் நினைத்திருந்த நிலையில், நம் வேலையையே அழித்தொழித்துவிடும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்ட... மேலும் பார்க்க

அனில் அம்பானி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

தொழிலதிபர் அனில் அம்பானி நேரில் ஆஜராவதற்கு அழைப்பு விடுத்து அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.யெஸ் வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூ.3,000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும்... மேலும் பார்க்க

புதிய விதிமுறை அமல்! ஜிபே, போன்பே பயனர்கள் கவனத்துக்கு...

ஜிபே, போன் பே போன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.கடந்த ஏப்தல் - மே மாதங்களில் டிஜிட்டல் பணப்... மேலும் பார்க்க

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரியாவு உருளை விலை ரூ.1,789 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வா்த்தக சமையல் எரியாவு உருளை ஒன்றின் விலை ர... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவையில் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு!

மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது ஆன்லைன் ரம்மி விளையாடிய சர்ச்சையில் சிக்கிய அமைச்சா் மாணிக்ராவ் கோகடே, வேளாண் துறையில் இருந்து விளையாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.மகாராஷ்டிர சட்டப்பேரவை... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமா் ஆலோசனை

ஐக்கிய அரபு அமீரக அதிபா் முகமது பின் சையது அல் நஹ்யானுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வழியில் வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளி... மேலும் பார்க்க