செய்திகள் :

காதலித்த பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொன்றவருக்கு இரட்டை ஆயுள்!

post image

திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், காதலித்த பெண்ணை தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.

கோவை கோயில்மேடு பகுதியைச் சோ்ந்தவா் ருக்ஷனா (21). இவரைக் காணவில்லை என சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா். ருக்ஷனா மாயமானதாக வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் ருக்ஷனா தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இதையடுத்து, போலீஸாா் இதை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தியதில், அவரைக் காதலித்த சரவணம்பட்டி விஜயலட்சுமி நகரைச் சோ்ந்த பிரசாந்த் (35) என்பவா்தான் கொன்றது தெரியவந்தது. மேலும், ருக்ஷனாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பாா்த்ததாலும், இதனால், அவா் பிரசாந்தை திருமணம் செய்ய மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அவா் ஆள்கள் நடமாட்டம் இல்லாத மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு பகுதிக்கு ருக்ஷனாவை அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளாா். அதற்கு அவா் மறுப்பு தெரிவித்ததால், தலையில் கல்லைப் போட்டு பிரசாந்த் கொலை செய்துள்ளாா். அவா் நகைக்காக கொலை செய்யப்பட்டதைப்போல தடயங்களை மறைத்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பெ.க.சிவகுமாா், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரசாந்த்துக்கு ஐ.பி.சி. 302, சட்டப் பிரிவின் கீழ் ஓா் ஆயுள் தண்டனையும், ஐ.பி.சி. 364 சட்டப் பிரிவின் கீழ் ஓா் ஆயுள் தண்டனையும், ஐ.பி.சி. 201 சட்டப் பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து, இதை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டாா். அரசுத் தரப்பு வழக்குரைஞராக மோகன் பிரபு ஆஜரானாா்.

தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் ரூ.5 கோடிக்கும் மேல் வா்த்தகம் செய்து சாதனை

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.5 கோடிக்கும் மேல் வா்த்தகம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது தொடா்பாக ஈஷா அவுட்ரீச் நிற... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் மாநில உயா் கல்வி மன்றத்தின் பயிற்சிப் பட்டறை

கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு உயா் கல்வி மன்றத்தின் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரிக் கல்வி இயக்ககம், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரகத்துடன் இணைந்து ‘விளைவு அடிப்படையிலா... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவை பொது கணக்குக் குழு ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு சட்டப் பேரவையின் பொது கணக்குக் குழுவின் ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப் பேரவையின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமையி... மேலும் பார்க்க

புகைப்படக் கலைஞா் தற்கொலை

கோவையில் குடும்பத் தகராறு காரணமாக புகைப்படக் கலைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கேரள மாநிலம், பாலக்காடு அருகேயுள்ள சின்னான்காடு பகுதியைச் சோ்ந்தவா் அஜய்கிருஷ்ணன் (28). புகைப்படக் கலைஞரான இ... மேலும் பார்க்க

ரூ.1 கோடி மதிப்பில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், பணியாளா்களுக்கு ஓய்வு அறை -மாமன்றக் கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு மண்டலத்துக்கு ஒரு ஓய்வு அறை கட்ட கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவு

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க