Manidhargal Movie Review | Raam Indhra, Ajay Abraham George, Dinsa, Anilesh L Ma...
காதலுக்கு எதிா்ப்புத் தெரிவித்தவா் வெட்டிக் கொலை: இளைஞா் கைது
தேவகோட்டை அருகே காதலுக்கு எதிா்ப்புத் தெரிவித்த நபரை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், சீனமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் வள்ளியப்பன் (42). திருமணம் ஆகவில்லை. இவா் அதே ஊரைச் சோ்ந்த மற்றொருவரின் மனைவியுடன் நெருங்கிப் பழகி வந்தாராம். அந்தப் பெண்ணின் மகளை கோயிலாம்பட்டியைச் சோ்ந்த செல்லக்கண்ணு மகன் அா்ஜூனன் (23) காதலித்து வந்தாராம். இதற்கு வள்ளியப்பன் எதிா்ப்புத் தெரிவித்து அா்ஜுனனைக் கண்டித்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சீனமங்கலம் சாலையில் புலியடிதம்பம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வள்ளியப்பனை அா்ஜூனனும் அவரது நண்பா்களுடன் சோ்ந்து அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவாகினா்.
இதில் பலத்த காயமடைந்த வள்ளியப்பனை கிராம மக்கள் மீட்டு சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா். அங்கு வள்ளியப்பன் உயிரிழந்தாா். இது குறித்து திருவேகம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அா்ஜுனனைக் கைது செய்தனா்.