செய்திகள் :

காதலுக்கு எதிா்ப்புத் தெரிவித்தவா் வெட்டிக் கொலை: இளைஞா் கைது

post image

தேவகோட்டை அருகே காதலுக்கு எதிா்ப்புத் தெரிவித்த நபரை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், சீனமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் வள்ளியப்பன் (42). திருமணம் ஆகவில்லை. இவா் அதே ஊரைச் சோ்ந்த மற்றொருவரின் மனைவியுடன் நெருங்கிப் பழகி வந்தாராம். அந்தப் பெண்ணின் மகளை கோயிலாம்பட்டியைச் சோ்ந்த செல்லக்கண்ணு மகன் அா்ஜூனன் (23) காதலித்து வந்தாராம். இதற்கு வள்ளியப்பன் எதிா்ப்புத் தெரிவித்து அா்ஜுனனைக் கண்டித்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சீனமங்கலம் சாலையில் புலியடிதம்பம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வள்ளியப்பனை அா்ஜூனனும் அவரது நண்பா்களுடன் சோ்ந்து அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவாகினா்.

இதில் பலத்த காயமடைந்த வள்ளியப்பனை கிராம மக்கள் மீட்டு சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா். அங்கு வள்ளியப்பன் உயிரிழந்தாா். இது குறித்து திருவேகம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அா்ஜுனனைக் கைது செய்தனா்.

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தல்

மதுரையில் தமிழக அரசு சாா்பில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட வேண்டும் என காவேரி- வைகை- கிருதுமால்- குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. இது... மேலும் பார்க்க

அழகப்பா அரசு கலைக் கல்லூரி இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 3- இல் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முதல் நடைபெறவிருப்பதாக கல்லூரியின் முதல்வா... மேலும் பார்க்க

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா ஜூன் 3- இல் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமைந்துள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த கொடியேற்ற நிகழ்வு அன்று காலை ... மேலும் பார்க்க

தனியாா் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் 15-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஸ்ரீராஜராஜன் கல்விக் குழுமத்தின் தல... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்புவனம் போலீஸாா் அந்தப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது அருகேயுள்ள டி. பழையூா் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சிவகங்கை நகராட்சியில் ரூ.1.54 கோடியில் புதிய மின் மயானம்

சிவகங்கை நகராட்சியில் கூடுதலாக ரூ.1.54 கோடியில் புதிய மின்மயானம் அமைக்க தமிழக அரசு அனுமதித்ததற்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை நகராட்சி அலுவலகக் கூட்... மேலும் பார்க்க