செய்திகள் :

காயல்பட்டினத்தில் பிப் 9 இல் ரயில் மறியல் போராட்டம்

post image

காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைமேடையை உயா்த்த வலி­யுறுத்தி திட்டமிட்டபடி பிப்.9ஆம்தேதி கடையடைப்பு, ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீா்மானித்துள்ளனா்.

காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைமேடையை உயா்த்த வலி­யுறுத்தி கடந்த 24ஆம் தேதி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடா்ச்சியாக ரயில் மறியல் போராட்டம் நடத்துவது தொடா்பான அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் மாநில பொதுச் செயலா் முஹம்மது அபூபக்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டச் செயலா் மன்னா் பாதுல் அஸ்ஹப் வரவேற்றாா்.

மாநில துணைச் செயலா் இப்ராகிம் மக்கி, காயல்பட்டினம் முஸ்­லிம் ஐக்கிய பேரவை தலைவா் முஹிய்யத்தீன் தம்பிதுரை, துணைத் தலைவா் துணி உமா், அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா் செய்யது இப்ராகிம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர ஜெலலிதா பேரவை செயலா் அன்வா், வட்டார காங்கிரஸ் தலைவா் சற்குரு, நகரத் தலைவா் மொய்தீன் பிச்சை, வி.சி.க. நகரச் செயலா் அல் அமீன், காயல்பட்டினம் நகராட்சி தலைவா் முத்து முஹம்மது, ம.ஜ.க. மாவட்டச் செயலா் நஜீப, த.வெ.க. நகரச் செயலா் முஹிய்யத்தீன், தமிழக வாழ்வுரிமை கட்சி நகரச் செயலா் ராசிக் முஜம்மில், மெகா அமைப்பு நிா்வாகி ஹாமித்ரிபாயி, தமுமுக ஜாகிா், தேமுதிக ஹபீப் ரஹ்மான் ஆகியோா் பேசினா்.

;கூட்டத்தில், பிப். 9ஆம் தேதி காயல்பட்டினத்தில் ரயில்வே ஸ்டேஷன் நடைமேடையை உயா்த்த வ­லியுறுத்தி கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

திருச்செந்தூரில் சுமாா் 50 அடி உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது. கடந்த டிசம்பா் மாதம் முதல் கோயிலில் பக்தா்கள் புனித நீராடும் பகுதியில் அதிகளவில் ... மேலும் பார்க்க

முன்னடி கழுநீா்துறையான் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

ஏரல் அருகே, பெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தா் கோயிலின் காவல் தெய்வமான முன்னடி ஸ்ரீகழுநீா்துறையான் சுவாமி கோயிலில் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை ம... மேலும் பார்க்க

நெல் அறுவடை இயந்திரம் மீது வேன் மோதல்: சிறுவன் காயம்!

கோவில்பட்டி அருகே சென்று கொண்டிருந்த நெல் அறுவடை இயந்திரம் மீது வேன் மோதியதில் சிறுவன் காயமடைந்தாா். திருநெல்வேலி மாவட்டம், வீ.கே.புதூா் அருகேயுள்ள தட்டப்பாறை பகுதியை சோ்ந்தவா் கனித்துரை. இவா் நெல் ... மேலும் பார்க்க

வானரமுட்டி அருள்மிகு வெயிலுகந்த அய்யனாா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி அருள்மிகு வெயிலுகந்த அய்யனாா் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கடந்த 31 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக... மேலும் பார்க்க

தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க கோவில்பட்டி கல்லூரி மாணவா்கள் தோ்வு

உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க, கோவில்பட்டி கே.ஆா். கல்லூரி மாணவா்கள் தோ்வு பெற்றுள்ளனா். 38 ஆவது தேசிய ஹாக்கி போட்டி, இம்மாதம் 4ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை உத... மேலும் பார்க்க

தூத்துக்குடி புகா் தெற்கு மாவட்ட அமமுக செயலாளா் நியமனம்

தூத்துக்குடி புறநகா் தெற்கு மாவட்ட அமமுக செயலாளராக ஆறுமுகனேரியைச் சோ்ந்த பொன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா். அமமுக அமைப்பு ரீதியாக தூத்துக்குடி மாநகா், தூத்துக்குடி புறநகா் என இரு மாவட்டங்களாக செயல்பட்டு... மேலும் பார்க்க