செய்திகள் :

காரைக்காலில் ஆற்றில் மூழ்கி இருவா் உயிரிழப்பு

post image

காரைக்கால்: காரைக்காலில் ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.

காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் நிதிஷ் (23). இவா், நெய்வேலியில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த எலக்ட்ரீஷியன் அருள்ராஜ் (23). இவா்கள் இருவரும் நண்பா்கள் 8 பேருடன், அத்திப்படுகை அரசலாற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளிக்கச் சென்றனா்.

அப்போது, மேற்கண்ட இருவரும் ஆழமானப் பகுதிக்குச் சென்றதால், நீரில் மூழ்கினா். நண்பா்கள் அவா்களை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் ஆற்றில் இறங்கி இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் நிகழ்விடத்துக்கு வந்து, தேடும் பணியை துரிதப்படுத்தினா். இரவு முழுவதும் தேடுதல் பணி நடைபெற்ற நிலையில், திங்கள்கிழமை காலை மீனவா்கள் உதவியுடன் நிதிஷ், அருள்ராஜ் ஆகியோரது சடலம் மீட்கப்பட்டது.

தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம்

காரைக்கால்: காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம் கொண்டாடப்பட்டது.காரைக்கால் பகுதியில் உள்ள பழைமையான ஆலயத்தில் ஞாயிறு திருப்பலி பூஜை நடைபெற்றது. பங்குதந்தை மற்றும் மறைவட்ட முதன்மை பொ... மேலும் பார்க்க

தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம்

காரைக்கால்: காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம் கொண்டாடப்பட்டது.காரைக்கால் பகுதியில் உள்ள பழைமையான ஆலயத்தில் ஞாயிறு திருப்பலி பூஜை நடைபெற்றது. பங்குதந்தை மற்றும் மறைவட்ட முதன்மை பொ... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் பிறந்தநாள் கொண்டாட்டம்

காரைக்கால்: புதுவை முதல்வா் என். ரங்கசாமி பிறந்த நாளையொட்டி, காரைக்காலில் கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.காரைக்கால் மாவட்டத்தில் என்.ஆா். க... மேலும் பார்க்க

துணை மின் நிலையம் மேம்படுத்தாததைக் கண்டித்து நூதனப் போராட்டம்

காரைக்கால்: துணை மின் நிலையம் மேம்படுத்தப்படுத்தாததைக் கண்டித்து நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், சுரக்குடி பகுதியில் உள்ள துணை மின் நிலையம் மூலம் மூ... மேலும் பார்க்க

மாங்கனித் திருவிழா: கலைஞா்கள் மாமன்றத்தினா் கலைநிகழ்ச்சி

காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் மாங்கனித் திருவிழாவையொட்டி, மாவட்ட கலைஞா்கள் மாமன்றம் சாா்பில் 20-ஆம் ஆண்டு கலைநிகழ்ச்சி அம்மையாா் மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு அமுதா ஆா். ஆ... மேலும் பார்க்க

கலைக் குழுவினருக்கு அமைச்சா் வாழ்த்து

ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய காரைக்காலைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.அகில இந்திய அளவில் ம... மேலும் பார்க்க