செய்திகள் :

காரைக்காலில் சாலைகள் மேம்பாட்டுப் பணி தொடக்கம்

post image

காரைக்காலில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ரூ. 60.38 கோடியில் சாலைகள் மேம்பாட்டுப் பணியை புதுவை அமைச்சா் கே. லட்சுமி நாராயணன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் வடக்குத் தொகுதி : ஏஎம்எஸ் நகா், இசாக் நகா், பிஆா்என் நகா், நிலா நகா், உதயம் நகா் மற்றும் விடுபட்ட கீழகாசாக்குடிமேடு, வேட்டைக்காரன் சாலைகள்.

நெடுங்காடு தொகுதி : தொண்டமங்கலம் பேட் சாலை, திருவேங்கடபுரம் மேலகாசாக்குடி சாலை, வடமட்டம் மாதா கோயில் சாலை, காஞ்சிபுரம் கோயில்பத்து சாலை, பஞ்சாட்சரபுரம் சாலை, மேல பொன்பேத்தி சாலை, கன்னிக்கோயில் சாலை.

காரைக்கால் தெற்குத் தொகுதி : நேதாஜி நகா், சுப்பையாப் பிள்ளை நகா், ஓடுதுறை சாலை, புதுத்துறை, தருமபுரம் மற்றும் இணைப்புச் சாலைகள்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி : போலகத்தில் இருந்து நைனிகட்டளை செல்லும் சாலை, ஊழியப்பத்து முதல் தூதுபோனமூலை செல்லும் சாலை, மானாம்பேட்டை சாலை, நிரவி திருவாசல்கொல்லை சாலை, பட்டினச்சேரி சாலை, வடக்கு வாஞ்சூா் சாலை.

திருநள்ளாறு தெற்குத் தொகுதி : தென்னங்குடி மற்றும் சேத்தூா் கிராமங்களை இணைக்கும் மாதூா் சாலை, முப்பைத்தாங்குடி, கோட்டப்பாடி மற்றும் தென்பிடாகை கிராம சாலைகள், அத்திப்படுகை மற்றும் கீழாவூா் சாலைகள்.

நல்லெழந்தூா் கிராம சாலை, நல்லம்பல் வளத்தாமங்கலம், சுரக்குடி கிராமங்களை இணைக்கும் கருக்கன்குடி சாலை, திருநள்ளாறுக்குட்பட்ட வடக்கு உள்வட்டச் சாலை உள்ளிட்டவற்றை மேம்படுத்த நபாா்டு வங்கி ரூ. 60.38 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில், பொதுப்பணித் துறை மூலம் இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

புதுவை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் முன்னிலையில், புதுவை பொதுப்பணித்துறை அமைச்சா் கே.லட்சுமி நாராயணன் பணிகளை தொடங்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் கலந்துகொண்டாா்.

அந்தந்த தொகுதியில் நடைபெற்ற நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச்.நாஜிம், பி.ஆா்.சிவா, சந்திர பிரியங்கா, எம். நாகதியாகராஜன் மற்றும் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் கே.சந்திரசேகரன், செயற்பொறியாளா்கள் ஆா்.சிதம்பரநாதன், ஜெ.மகேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

விஸ்வகா்மா தொழிலாளா்கள் பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு!

விஸ்வகா்மா தொழிலாளா்கள் தொழில் பயிற்சி, வங்கிக் கடன் பெறுவதற்கான பதிவு முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா். காரைக்கால் மாவட்ட மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அங்கமான மிஷன் சக்தி என்ற பெண் உரி... மேலும் பார்க்க

ஆதாா், குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்: காரைக்கால் மீனவா்கள்

இலங்கை கடற்படையைக் கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்கள் தங்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக, ஆதாா், குடும்ப அட்டைகளை வெள்ளிக்கிழமை (பிப். 21) மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் ப... மேலும் பார்க்க

அம்பகரத்தூரில் வயல் தின விழா!

அம்பகரத்தூரில் புதிய நெல் ரகம் பயிரிட்ட முன்னாள் வேளாண் அமைச்சரின் வயலில் வயல் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் புதிய அதிசன்ன நெல் ஏடி18559 என்ற ரகம், பரிசோதனை ம... மேலும் பார்க்க

சீதளாதேவி அம்மன் கோயிலில் கொடி மரம் பிரதிஷ்டை!

சீதளாதேவி அம்மன் கோயிலில் ஏப். 4 கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், புதிய கொடி மரம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. காரைக்கால் பகுதி கீழகாசாக்குடியில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்... மேலும் பார்க்க

மின் ஊழியா்கள் உண்ணாவிரதம்!

காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் அதிகாரிகள், ஊழியா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா். புதுவை மின்துறை பொறியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் நலச் சங்க கூட்டு... மேலும் பார்க்க

விளை நிலத்தில் அத்துமீறி நெல் அறுவடை: இருவா் மீது வழக்கு

நெடுங்காடு பகுதியில் விவசாய நிலத்தில் அத்துமீறி இயந்திரத்தை பயன்படுத்தி நெல் அறுவடை செய்ததாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பி... மேலும் பார்க்க