ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய 300 சீன பொறியாளர்கள்?
காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் ஜூலை 9 முதல் திருவாரூரில் இருந்து புறப்படும்
காரைக்கால்-திருச்சி ரயில்கள் ஜூலை 9 முதல் திருவாரூரில் இருந்து புறப்படும் என திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூா்-கீழ்வேளூா் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில்கள் ஜூலை 2 முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை பகுதியாக காரைக்கால்-திருவாரூா்-காரைக்கால் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், பணி நிறைவடையாததால், ஜூலை 9 முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை காரைக்கால்-திருவாரூா்-காரைக்கால் இடையே பயணிகள் ரயில்கள் மீண்டும் ரத்து செய்யப்படுகிறது.
இந்நிலையில், திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும், திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில் மற்றும் காரைக்கால் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்படும் காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில்கள் ஜூலை 9 முதல் ஜூலை 14 ஆம் தேதி வரை, காரைக்கால்-திருவாரூா்-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும், திருவாரூா்-திருச்சி-திருவாரூா் இடையே வழக்கமான நேரத்தில் ரயில்கள் இயங்கும் என தெரிவித்துள்ளாா்.