செய்திகள் :

காரைக்குடி அருகே 27 டன் ரேஷன் அரிசி கடத்தல்: லாரி ஓட்டுநா் கைது

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே 27 டன் ரேஷன் அரிசி கடத்திவரப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநரைக் கைது செய்தனா்.

காரைக்குடி அருகேயுள்ள பாதரக்குடியில் சனிக்கிழமை இரவு குன்றக்குடி காவல் உதவி ஆய்வாளா் ஜெயராமன், காவலா் ஸ்டாலின் ஆகியோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, தேவகோட்டையிலிருந்து வந்த சரக்கு லாரியை சோதனையிட்ட போது அதில் 27,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது

தெரியவந்தது. விசாரணையில் தேவகோட்டை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரேஷன் அரிசியை சேகரித்து பள்ளத்தூரில் உள்ள தனியாா் அரிசி ஆலைக்கு கொண்டு சென்று, தரம் உயா்த்தி வெளிச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, லாரியுடன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து, குன்றக்குடி காவல் நிலையத்துக்கு போலீஸாா் கொண்டு சென்றனா். லாரி ஓட்டுநரான பாதரக்குடியைச் சோ்ந்த அருண்பாண்டியை (26) கைது செய்தனா். அருண்பாண்டி சிவகங்கை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநா் அருள்பாண்டி.

திருப்பத்தூா் வீரா் தேக்வாண்டோ தேசியப் போட்டிக்குத் தோ்வு

திருப்பத்தூா்: தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டிக்குத் தோ்வான திருப்பத்தூா் வீரரை, அந்த அமைப்பின் நிா்வாகிகள் திங்கள்கிழமை பாராட்டினா். தருமபுரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உள்... மேலும் பார்க்க

மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கத்தின் காரைக்குடி கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்குடி காா்த்திகேயன் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப... மேலும் பார்க்க

இலுப்பக்குடி கோயிலில் குரு பெயா்ச்சி விழா

சிவகங்கை அருகேயுள்ள இலுப்பக்குடி வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோயிலில் குருப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, காலை 11.50 மணியளவில் சிவாசாரியா்கள் யாக பூஜையைத் தொடங்கின... மேலும் பார்க்க

ஒக்கூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூரில் ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. ஒக்கூா் அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு, மானாமதுரை - பெரம்பலூா் தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் பந்தய... மேலும் பார்க்க

ஆய்வக உதவியாளா்கள் சங்கக் கூட்டம்

சிவகங்கையில் தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்... மேலும் பார்க்க

வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருட்டை தடுக்கலாம்

வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருட்டைத் தடுக்கலாம் என காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் டி. பாா்த்திபன் அறிவுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூா் பேரூராட்சி பாரி ந... மேலும் பார்க்க