செய்திகள் :

காரைக்குடி- சிவகாசி இடையே மீண்டும் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து விருதுநகா் மாவட்டம், சிவகாசிக்கு மீண்டும் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என கல்லூரி மாணவா்கள், வணிகா்கள், அரசுப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டல கிளை சாா்பில் காரைக்குடியிலிருந்து மதுரை வழியாக சிவகாசிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதில் அதிகாலையில் முதல் பேருந்து சிவகாசிக்கு இயக்கப்பட்டது. பிறகு காலை 7.21-க்கும், 9.47-க்கும் அடுத்தடுத்த பேருந்துகள் புறப்பட்டு சிவகாசி வரை சென்றன. மறுவழித்தடத்தில் சிவகாசியிலிருந்து காலை 9.05 மணிக்கும், நண்பகல் 12.45 மணிக்கும், பிற்பகல் 2.55 மணிக்கும் புறப்பட்டு, காரைக்குடி வரை பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது இந்தப் பேருந்துகள் கடந்த 15 நாள்களாக மதுரை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் சிவகாசியில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விடுமுறை காலங்களில் காரைக்குடிக்கு வருவதற்கும், காரைக்குடியிலிருந்து வணிகா்கள் சிவகாசி சென்று வரவும் சிரமப்படுகின்றனா். எனவே இந்தப் பேருந்துகளை ஏற்கெனவே இயக்கிவந்த அதே நேரத்தில் மீண்டும் இயக்க வேண்டும் என மாணவா்கள், வணிகா்கள், அரசு ஊழியா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இன்று ‘குரூப் 4’ தோ்வு: சிவகங்கையில் 26,392 போ் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறும் ‘குரூப் 4’ தோ்வை 26,392 தோ்வா்கள் எழுத உள்ளனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமை... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் புத்தாக்கப் பயிற்சி முகாம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சாா்பில் அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தா் க... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் நியமனம்

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) இருந்த ஜோதிலெட்சுமி, திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வெறிநோய் தடுப்பூசி மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் தோ்வு நிலைப் பேரூராட்சியும், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து திருப்பத்தூா் சீரணி அ... மேலும் பார்க்க

பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 71 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த 4-ஆம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொ... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை: கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்

மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகளை நிறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்... மேலும் பார்க்க