முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
காரைக்குடியில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடனுதவி முகாம்: வருகிற ஜூன் 30 வரை நடைபெறுகிறது
தொழில் கடன், மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பெறுவதற்கு ஏதுவாக, குறு, சிறு, நடுத்தர நிறுவன தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வருகிற 30- ஆம் தேதி வரை காரைக்குடியிலுள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். இந்தக் கழகம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய தொழில் சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவிகளை வழங்கி வருகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், காரைக்குடி கிளை, எண்- 45, எஸ்.பி.கே. வளாகம், இரண்டாம் தளம், ஸ்ரீ சண்முகராஜா சாலை, அம்பேத்கா் சிலை அருகில், காரைக்குடி- 630 001 என்ற முகவரியில் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில், குறு, சிறு, நடுத்தர நிறுவன தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
எனவே, புதிய தொழில் முனைவோா், தொழிலதிபா்கள் இந்த முகாம் மூலம் தொழில் கடன், மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு காரைக்குடி கிளை 04565-233464 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9445023464, 9442678010, 8122279058, 98422 59351 ஆகிய கைப்பேசி எண்களிலோ அல்லது கிளை மேலாளா், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், காரைக்குடி கிளை என்ற முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.