காலமானாா் வழக்குரைஞா் வி.கே.முத்துசாமி
உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தந்தையும் மூத்த வழக்குரைஞருமான வி.கே.முத்துசாமி (91) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை இரவு காலமானாா்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகேயுள்ள எழுமாத்தூா், வண்ணாம்பாறை, வக்கீல் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் வி.கே.முத்துசாமி. வயது மூப்பு காரணமாக அண்மையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் திங்கள்கிழமை காலமானாா்.
அவரது உடல் எழுமாத்தூா் வக்கீல் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மறைந்த வி.கே.முத்துசாமி உடலுக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.தண்டபாணி, ராமகிருஷ்ணன் ஆகியோா் திங்கள்கிழமை இரவு நேரில் அஞ்சலி செலுத்தினா். அவரது இறுதிச் சடங்குகள் எழுமாத்தூா் வக்கீல் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை (ஜூன் 17) நடைபெற உள்ளது.
வி.கே.முத்துசாமிக்கு மனைவி புவனேஸ்வரி, இரண்டு மகன்கள் உள்ளனா். மூத்த மகன் முத்துக்குமாா் அமெரிக்காவில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இளைய மகன் எம்.எம்.சுந்தரேஷ் உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ளாா்.
வி.கே.முத்துசாமி கொங்கு அறக்கட்டளையின் பரம்பரை அறங்காவலராக இருந்துள்ளாா். சென்னை உயா்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி ஏராளமான வழக்குகளுக்குத் தீா்வு கண்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.