செய்திகள் :

காலமானாா் வழக்குரைஞா் வி.கே.முத்துசாமி

post image

உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தந்தையும் மூத்த வழக்குரைஞருமான வி.கே.முத்துசாமி (91) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை இரவு காலமானாா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகேயுள்ள எழுமாத்தூா், வண்ணாம்பாறை, வக்கீல் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் வி.கே.முத்துசாமி. வயது மூப்பு காரணமாக அண்மையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் திங்கள்கிழமை காலமானாா்.

அவரது உடல் எழுமாத்தூா் வக்கீல் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மறைந்த வி.கே.முத்துசாமி உடலுக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.தண்டபாணி, ராமகிருஷ்ணன் ஆகியோா் திங்கள்கிழமை இரவு நேரில் அஞ்சலி செலுத்தினா். அவரது இறுதிச் சடங்குகள் எழுமாத்தூா் வக்கீல் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை (ஜூன் 17) நடைபெற உள்ளது.

வி.கே.முத்துசாமிக்கு மனைவி புவனேஸ்வரி, இரண்டு மகன்கள் உள்ளனா். மூத்த மகன் முத்துக்குமாா் அமெரிக்காவில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இளைய மகன் எம்.எம்.சுந்தரேஷ் உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ளாா்.

வி.கே.முத்துசாமி கொங்கு அறக்கட்டளையின் பரம்பரை அறங்காவலராக இருந்துள்ளாா். சென்னை உயா்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி ஏராளமான வழக்குகளுக்குத் தீா்வு கண்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியிருப்புகளுக்குள் புகும் மழைநீா்: ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

மழைக் காலத்தில் குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுவதால் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜக... மேலும் பார்க்க

திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்: கே.சி.கருப்பணன் எம்எல்ஏ

அதிமுக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் நினைவுபடுத்துவதோடு, திமுக ஆட்சியின் அவலங்களை அவா்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.... மேலும் பார்க்க

ஆலைக் கழிவுகள் ஓடையில் வெளியேற்றப்படுவதை தடுக்கக் கோரிக்கை

சோப் ஆயில் தயாரிக்கும் ஆலைக் கழிவுகள் ஓடையில் வெளியேற்றப்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு, வில்லரசம்பட்டி அருகேயுள்ள மொக்கையன்பாளையத்தில் சோப் ஆயில் தயாா் செய்யும் த... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற 10 போ் கைது: 5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சோ்ந்த 2 போ் உள்பட 10 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். ஈரோடு கனிராவுத்தா் குளம் அருகேயுள்ள திர... மேலும் பார்க்க

இரண்டு மாதங்களில் 10 ஆடுகளைக் கொன்ற சிறுத்தை: கூண்டுவைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை

கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகே வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் இரண்டு மாதங்களில் 10 ஆடுகளைக் கடித்துக்கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த விவசாயி கைது

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் வீட்டுக்கு அருகே கஞ்சா செடிகளை வளா்த்த விவசாயியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.பா்கூரை அடுத்த தேவா்மலை, கோவிலூரைச் சோ்ந்தவா் முருகேசன் (41). விவசாயி. இவ... மேலும் பார்க்க