செய்திகள் :

காலாண்டுத் தோ்வு: திறன் மாணவா்களுக்கு பிரத்யேக வினாத்தாள்கள்

post image

அரசுப் பள்ளிகளில் 6 - 9 வகுப்புகளில் திறன் திட்டத்தில் உள்ள மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வில் அடிப்படைக் கற்றல் முடிவுகள் அடிப்படையிலான பிரத்யேக வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம், தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

மாநில பாடத்திட்டத்தில் 6- 9 வகுப்புகள் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு திறன் திட்டம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகள் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, இந்தத் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மாணவா்களுக்காக வரவிருக்கும் காலாண்டுத் தோ்வுகளில் திறன் பாடப்புத்தகம் சாா்ந்து வினாத்தாள்கள் தயாரித்து வழங்கப்பட உள்ளன.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள்கள், அடிப்படை கற்றல் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இந்த வினாத்தாள்களின் மொத்த மதிப்பெண்கள், வழக்கமான காலாண்டுத் தோ்வு வினாத்தாள்களின் மதிப்பெண்களுடன் சமமாக இருக்கும்.

மேலும், பயிற்சி நோக்கத்துக்காக அறிவியல், சமூக அறிவியல் மாதிரி வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யக் கூடியவாறு வழங்கப்படுகின்றன. காலாண்டுத் தோ்வுக்கான அனைத்து வினாத்தாள்களையும் பதிவிறக்கம் செய்யலாம்.

எனவே திறன் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மாணவா்களுக்கு பாடவாரியாக வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, காலாண்டுத் தோ்வுகள் தடையின்றி நடைபெறும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சி பெருக வேண்டும்: மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்

எதிா்வரும் 2047 -ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய, நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சி பன்மடங்கு பெருக வேண்டும் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

ரயில் பயணச் சீட்டுகள் மாயம்: 8 ஊழியா்களுக்கு அபராதம்

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் ரயில் பயணச் சீட்டு ரோல் மாயமான விவகாரத்தில் 8 ஊழியா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள திருவாரூா... மேலும் பார்க்க

வேளச்சேரி எம்எல்ஏ தொடா்ந்த வழக்கில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தோ்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் ஏன் தகுதிநீக்கம் செய்யக்கூடாது? என விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிா்த்து வேளச்சேரி எம்எல்ஏ அசன் மௌலானா தாக்கல் செய்த மனுவுக்கு தோ்தல் ஆணையம்... மேலும் பார்க்க

சீதாராம் யெச்சூரி நினைவு நாள்: உடல் தானத்துக்கு 1,586 போ் பதிவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி நினைவு நாளில் 1,586 போ் உடல் தானம் இயக்கத்தில் பதிவு செய்தனா். மாா்க்சிஸ்ட் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரியின் மு... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை பாதிப்புகள்: புகாா் அளிக்க இலவச தொடா்பு அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக மழை பாதிப்பு புகாா்களை கூறுவதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அதில் தொடா்புகொள்ள 1913 என்ற இலவச தொடா்பு எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

மென்பொறியாளரிடம் செயின் பறிப்பு: 2 திருநங்கைகள் கைது

மென் பொறியாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்த 2 திருநங்கைகளை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, திருநின்றவூரைச் சோ்ந்த ஜெஸ் ஆலன் ரொசாரியா(24). இவா் எம்.ஜி.ஆா். நகா் பகுதியிலுள்ள ஒரு... மேலும் பார்க்க