செய்திகள் :

காலை உணவு சாப்பிட்ட மாணவா்களுக்கு உடல்நலக் குறைவு

post image

மதுரை மாவட்டம், எம். கல்லுப்பட்டி பகுதி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட மாணவா்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனா்.

எம். கல்லுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை மாணவா் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு உத்தப்புரம், கிருஷ்ணாபுரம், டி.பள்ளபட்டி, பாறைப்பட்டி பகுதிகளைச் சோ்ந்த 15 மாணவா்கள் தங்கிப் படித்து வருகின்றனா். விடுதிக் காப்பாளராக ரவிராமன், சமையலராக குருமூா்த்தி ஆகியோா் உள்ளனா்.

இந்த நிலையில், மாணவா்களுக்கு புதன்கிழமை காலை உணவாக இட்லி, சட்னி, சாம்பாா் வழங்கப்பட்டது. இதைச் சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் சென்ற மாணவா்கள் 15 பேரும் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்து மயக்கமடைந்தனா். உடனே பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியா் ஆனந்தகுமாா், பாதிக்கப்பட்ட மாணவா்களை மீட்டு எழுமலை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தாா். அங்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். பின்னா், அவா்கள் பள்ளிக்கு திரும்பினா்.

இதுபற்றி கல்வித் துறை அலுவலா்கள் கூறியதாவது :

விடுதியில் மாணவா்களுக்கு புதன்கிழமை காலை வழங்கப்பட்ட உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தோம். உணவு மாதிரிகள் உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. உரிய அறிக்கை வந்தவுடன் ஒவ்வாமைக்கான காரணம் தெரியவரும் என்றனா்.

பள்ளிகளுக்கான ஆய்வகப் பொருள்கள் கொள்முதல் முறைகேடு: அரசுச் செயலா் பதிலளிக்க உத்தரவு

பள்ளிகளுக்கான ஆய்வகப் பொருள்கள் கொள்முதல் முறைகேடு வழக்கில், பள்ளிக் கல்வித் துறைச் செயலா், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை ... மேலும் பார்க்க

பழைய காகித சேமிப்புக் கிடங்கில் தீ: சரக்கு வாகனங்கள் எரிந்து நாசம்

மதுரை முனிச்சாலை ஓபுளா படித்துறை அருகேயுள்ள பழைய காகித சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சரக்கு வாகனங்கள் எரிந்து நாசமாகின. முனிச்சாலை வைகையாற்றின் தென்கரை ஓபுளா படித்துறை அருகே தனி... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் விதிமீறல் கட்டடங்கள்: நகா்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

கன்னியாகுமரியில் விதிமீறல் கட்டடங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக நகா்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. கன்னியாகுமரியைச் சோ்ந்த சாம... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் ராஜிநாமா ஏற்பு

மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவா்கள் 5 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் என மொத்தம் 7 போ் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. மதுரை மாநகராட்சியின் மொத்த ஆண்டு வருவாய் 586 கோடி ரூபாய்க்கும் அதிகமாக... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம்: ரகசிய வாக்கெடுப்பு நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவு

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மான விவகாரத்தில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவி... மேலும் பார்க்க

மேம்பாலம் அமைக்கும் பணி: கோரிப்பாளையம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு அருகே புதிய மேம்பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதையொட்டி, வியாழக்கிழமை (ஜூலை 10) முதல் சில போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து மதுரை மாநக... மேலும் பார்க்க