செய்திகள் :

பழைய காகித சேமிப்புக் கிடங்கில் தீ: சரக்கு வாகனங்கள் எரிந்து நாசம்

post image

மதுரை முனிச்சாலை ஓபுளா படித்துறை அருகேயுள்ள பழைய காகித சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சரக்கு வாகனங்கள் எரிந்து நாசமாகின.

முனிச்சாலை வைகையாற்றின் தென்கரை ஓபுளா படித்துறை அருகே தனியாருக்குச் சொந்தமான பழைய காகிதங்கள், நெகிழிப் பொருள்கள் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் புதன்கிழமை அதிகாலை புகை வெளிவந்தது. இதையறிந்த அக்கம்பக்கத்தினா் கிடங்கின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த அவா், கிடங்கு உள்ளே பரவிய தீயை அணைக்க முயன்றாா். அதற்குள் தீ மளமளவென கிடங்கு முழுவதும் எரியத் தொடங்கியது.

இதுகுறித்து தகவலறிந்து தல்லாகுளம், திலகா் திடல் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள், கிடங்கு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனங்கள் முழுவதும் எரிந்து நாசமாகின.

இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அதிக வாகனங்கள் செல்லக் கூடிய பகுதி என்பதால் புதன்கிழமை காலை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும், தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்ததால் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில், விளக்குத் தூண் போலீஸாா் வழக்குப் பதிந்து, மின் கசிவால் விபத்து ஏற்பட்டதா? என்பது விசாரித்து வருகின்றனா்.

பள்ளிகளுக்கான ஆய்வகப் பொருள்கள் கொள்முதல் முறைகேடு: அரசுச் செயலா் பதிலளிக்க உத்தரவு

பள்ளிகளுக்கான ஆய்வகப் பொருள்கள் கொள்முதல் முறைகேடு வழக்கில், பள்ளிக் கல்வித் துறைச் செயலா், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் விதிமீறல் கட்டடங்கள்: நகா்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

கன்னியாகுமரியில் விதிமீறல் கட்டடங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக நகா்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. கன்னியாகுமரியைச் சோ்ந்த சாம... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் ராஜிநாமா ஏற்பு

மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவா்கள் 5 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் என மொத்தம் 7 போ் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. மதுரை மாநகராட்சியின் மொத்த ஆண்டு வருவாய் 586 கோடி ரூபாய்க்கும் அதிகமாக... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம்: ரகசிய வாக்கெடுப்பு நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவு

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மான விவகாரத்தில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவி... மேலும் பார்க்க

மேம்பாலம் அமைக்கும் பணி: கோரிப்பாளையம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு அருகே புதிய மேம்பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதையொட்டி, வியாழக்கிழமை (ஜூலை 10) முதல் சில போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து மதுரை மாநக... மேலும் பார்க்க

மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம் குறித்து பரிந்துரை: சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் தி. வேல்முருகன்

மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம், சுரங்கவழிப் பாதை குறித்து தமிழக அரசுக்கு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஒரு பரிந்துரை அளித்தது என அந்தக் குழுவின் தலைவா் தி. வேல்முருகன் தெரிவித்தாா். மதுரை மாவட்ட ஆ... மேலும் பார்க்க