கால்நடை வளா்ப்பு குறித்து ஜூலை 15, 22-இல் பயிற்சி
தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சிகள் ஜூலை 15, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத் தலைவா் கே.பி. சரவணன் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே இயங்கி வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாட்டு பண்ணையம் குறித்து ஜூலை 15- ஆம் தேதியும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளா்ப்பு குறித்து 22-ஆம் தேதியும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவசப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இப்பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள் ஆதாா் அட்டை நகலுடன் கலந்துகொண்டு பயன் பெறலாம். முன்பதிவு அவசியமில்லை. சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04362 - 264665 என்ற எண்ணில் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடா்பு கொள்ளலாம்.