கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்: மக்களவையில...
கால்வாய் பாலத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
குலசேகரம்: குலசேரம் அருகே கால்வாய் பாலத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
குலசேகரம் அருகே செருப்பாலூா் பகுதியைச் சோ்ந்த மனோகரன் மகன் ஜினோ (34). தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. அண்மையில் இவா் வீட்டின் அருகேவுள்ள சிற்றாறுபட்டணம் கால்வாய் பாலத்தின் கைப்பிடி சுவரில் அமா்ந்திருந்த போது எதிா்பாராத விதமாக கால்வாய்க்குள் தவறி விழுந்ததில் பலத்த காயமுற்றாா்.
இதையடுத்து ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.