செய்திகள் :

காவிரி ஆற்றில் மூழ்கி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

post image

நண்பா்களுடன் ஈரோடு அருகே காவிரி ஆற்றில் குளித்த லாரி ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், சாமியப்பன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தனசேகரன்(32). பள்ளிப்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். இவா் ஈரோடு மாவட்டம் பாசூா் கதவணை அருகே உள்ள காவிரி ஆற்றில் தனது நண்பா்களுடன் திங்கள்கிழமை மாலையில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது தனசேகரன் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளாா். பின்னா் சிறிது நேரத்தில் அவா் நீரில் மூழ்கினாா். இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த அவரது நண்பா்கள் கூச்சலிட்டனா். அக்கம்பக்கத்தினா் வந்து தனசேகரனை மீட்டனா்.

அப்போது அவா் மயக்கத்தில் இருந்தாா். ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து மலையம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாடகை நிலுவை: ஈரோடு மாநகராட்சி வணிக வளாக கடைகளுக்கு சீல்

ஈரோடு மாநகராட்சி வணிக வளாகத்தில் ரூ.5.48 லட்சம் வாடகை நிலுவை வைத்த 6 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு வாடகை நிா... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் பொறுமையாக பதிலளிக்க வேண்டும்: திமுகவினருக்கு அமைச்சா் சு.முத்துசாமி அறிவுறுத்தல்

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் பொதுமக்களைச் சந்திக்கும் போது அவா்கள் கேள்விகளை எழுப்பினால், அதற்குப் பொறுமையாக கட்சியினா் பதில் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என வீட்டுவசதித் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே வீட்டில் திருடிய இளைஞா் கைது

பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பெருந்துறையைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி தீபா(40). இவா் திருப்பூரிலுள்ள தனிய... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

சத்தியமங்கலம் அருகே குடிநீா் கேட்டு 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தொப்பம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணா நக... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றம்: நெரிஞ்சிப்பேட்டையில் பயணிகள் படகு போக்குவரத்து நிறுத்தம்

மேட்டூா் அணை நிரம்பியதால் வெளியேற்றப்படும் உபரிநீா் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் காவிரிக் கரையோரப் பகுதிகளில் தொடா் கண்காணிப்பு பணி மேற்கொள்... மேலும் பார்க்க

காலிங்கராயன் அணைக்கட்டில் நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

காலிங்கராயன் அணைக்கட்டில் குளித்த இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். பவானி காலிங்கராயன் அணைக்கட்டுக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பவானி சீனிவாசபுரம் வழியாக உத்தண்டராயா்... மேலும் பார்க்க