காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம்: பிரசார இயக்கம் நடத்த முடிவு
காவிரி- குண்டாறு- வைகை இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி பிரசார இயக்கம் நடத்துவதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தீா்மானித்தது.
சிவகங்கையில் இந்தச் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் காவிரி- குண்டாறு- வைகை இணைப்புத் திட்டத்துக்கு தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்து, விரைந்து நிறைவேற்றக் கோரி, மாவட்டம் முழுவதும் பிரசார இயக்க நடத்துவது எனவும், இந்தியா முழுவதும் அரசுடைமை வங்கிகளில் வழங்கப்படும் அடமான நகைக் கடன்களுக்கு இடா்பாடு ஏற்படுத்தும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், எம். எஸ். சுவாமிநாதனின் பரிந்துரையை செயல்படுத்துவதாக அளித்த உறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஆறுமுகம், செயலராக வீரபாண்டி, பொருளாளராக விசுவநாதன், துணைத் தலைவா்களாக கே. அழகா்சாமி, ஜெயராமன், துணைச் செயலராக நீலமேகம் அண்ணாதுரை ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
மாநிலச் செயலா் சாமி நடராஜன், மாவட்ட துணைத் தலைவா் முத்துராமு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மோகன் ஆகியோா் பேசினா்.