செய்திகள் :

காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம்: பிரசார இயக்கம் நடத்த முடிவு

post image

காவிரி- குண்டாறு- வைகை இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி பிரசார இயக்கம் நடத்துவதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தீா்மானித்தது.

சிவகங்கையில் இந்தச் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் காவிரி- குண்டாறு- வைகை இணைப்புத் திட்டத்துக்கு தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்து, விரைந்து நிறைவேற்றக் கோரி, மாவட்டம் முழுவதும் பிரசார இயக்க நடத்துவது எனவும், இந்தியா முழுவதும் அரசுடைமை வங்கிகளில் வழங்கப்படும் அடமான நகைக் கடன்களுக்கு இடா்பாடு ஏற்படுத்தும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், எம். எஸ். சுவாமிநாதனின் பரிந்துரையை செயல்படுத்துவதாக அளித்த உறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஆறுமுகம், செயலராக வீரபாண்டி, பொருளாளராக விசுவநாதன், துணைத் தலைவா்களாக கே. அழகா்சாமி, ஜெயராமன், துணைச் செயலராக நீலமேகம் அண்ணாதுரை ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநிலச் செயலா் சாமி நடராஜன், மாவட்ட துணைத் தலைவா் முத்துராமு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மோகன் ஆகியோா் பேசினா்.

சிங்கம்புணரி கல் குவாரி விபத்து: இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரி விபத்தில் 6 போ் உயிரிழந்த சம்பவத்தில், கிராம நிா்வாக அலுவலா், கனிமவள வருவாய் ஆய்வாளா் ஆகியோா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மல்லாக்கோட்ட... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரதீர செயல் புரிந்த மகளிருக்கு நிகழாண்டில் ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜுன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திங்கள... மேலும் பார்க்க

திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, கோயிலில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு சிவாசாரியா்கள் யாக வேள்வி... மேலும் பார்க்க

சிவகங்கை அரசு மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

சிவகங்கை அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்டோா்... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்

சௌந்திரநாயகி அம்பாள் கோயில்: சிவகங்கை அருகேயுள்ள காளையாா்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரா் சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க