செய்திகள் :

காஷ்மீரில் தாக்குதல் எதிரொலி: நெல்லையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு

post image

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். பல்வேறு இடங்களில் தீவிர வாகன தணிக்கையும் நடைபெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் 28 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றனா்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. திருநெல்வேலி சரக டிஐஜி உத்தரவின் பேரில் திருநெல்வேலி மாநகரம், மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை தொடா் வாகன சோதனையில் போலீஸாா் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகரைப் பொருத்தவரையில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், டக்கரம்மாள்புரம், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம், வண்ணாா்பேட்டை மேம்பாலம் கீழ் பகுதி உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரையிலும் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் மேற்பாா்வையில் வள்ளியூா், பணகுடி, களக்காடு, நான்குனேரி, அம்பாசமுத்திரம், ராதாபுரம், கங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். சோதனை சாவடிகளில் கூடுதல் போலீஸாா் பணியில் அமா்த்தப்பட்டு விடிய விடிய கண்காணித்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைமேடைகள், பயணிகள் ஓய்வறை, சரக்குகளைகையாளும் அறைகள், தண்டவாளப் பகுதி உள்ளிட்ட இடங்களில் ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் மெட்டல் டிடக்டா், மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா். பயணிகளின் உடைமைகள், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த ரயில்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

புதன்கிழமை காலையிலும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிய மற்றும் பழைய கட்டடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், பேருந்து நிலையங்கள், நெல்லையப்பா் கோயில், முக்கிய மசூதிகள் உள்ளிட்டவை முன் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க