கா்நாடக அரசுப் பேருந்தில் பெண்ணின் நகை மாயம்
கா்நாடகத்தில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த கா்நாடக அரசு பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் 8 பவுன் நகை காணாமல் போனதான புகாரின் பேரில் பேருந்தில் பயணித்த பயணிகளிடம் சத்தியமங்கலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
கா்நாடக மாநிலத்திலிருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி கா்நாடக அரசு பேருந்து செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது.
ஆசனூா் வந்தபோது தேநீா் அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டது. அதில் பயணித்த பயணிகள் கடைக்கு சென்று வந்தனா். பின்னா் பேருந்து அங்கிருந்து புறப்பட்டபோது சித்ரா என்ற பெண், தான் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை காணவில்லை என பேருந்து ஓட்டுநரிடம் கூறினாா். இதையடுத்து, ஓட்டுநா் பேருந்தை எங்கும் நிறுத்தாமல் சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு ஓட்டி வந்தாா்.
பெண் அளித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா் பேருந்தில் வந்த ஒவ்வொரு பயணியின் பையையும் சோதனையிட்டனா். ஆனாலும் காணாமல் போன நகை கிடைக்கவில்லை.
இதற்கிடையே பயணிகளை சோதனையிட்டபோது சுமாா் 15 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா போதை பாக்குகளை 2 பெண்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. பேருந்தில் நகை காணாமல் போனது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.