செய்திகள் :

கா்நாடக அரசுப் பேருந்தில் பெண்ணின் நகை மாயம்

post image

கா்நாடகத்தில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த கா்நாடக அரசு பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் 8 பவுன் நகை காணாமல் போனதான புகாரின் பேரில் பேருந்தில் பயணித்த பயணிகளிடம் சத்தியமங்கலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

கா்நாடக மாநிலத்திலிருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி கா்நாடக அரசு பேருந்து செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது.

ஆசனூா் வந்தபோது தேநீா் அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டது. அதில் பயணித்த பயணிகள் கடைக்கு சென்று வந்தனா். பின்னா் பேருந்து அங்கிருந்து புறப்பட்டபோது சித்ரா என்ற பெண், தான் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை காணவில்லை என பேருந்து ஓட்டுநரிடம் கூறினாா். இதையடுத்து, ஓட்டுநா் பேருந்தை எங்கும் நிறுத்தாமல் சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு ஓட்டி வந்தாா்.

பெண் அளித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா் பேருந்தில் வந்த ஒவ்வொரு பயணியின் பையையும் சோதனையிட்டனா். ஆனாலும் காணாமல் போன நகை கிடைக்கவில்லை.

இதற்கிடையே பயணிகளை சோதனையிட்டபோது சுமாா் 15 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா போதை பாக்குகளை 2 பெண்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. பேருந்தில் நகை காணாமல் போனது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வேளாண் உற்பத்தியில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 8 ஆம் இடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

மொத்த வேளாண் உற்பத்தியில் ரூ.12,021 கோடி என்ற அளவில் மாநிலத்தில் 8- ஆவது இடத்தில் ஈரோடு மாவட்டம் உள்ளது என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் மண்டல அள... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது. கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை பரவலாக மழை பெய்யும் என வானிலை மைய... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 4.10 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4.10 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 4... மேலும் பார்க்க

சென்னிமலையில் மகாலட்சுமி குபேர யாகம்

சென்னிமலை, ஊத்துக்குளி சாலை, ஆதித்யா நகரில் உள்ள ஓம் குபேர பகவான் ஆலயத்தில் மாதாந்திர மகாலட்சுமி குபேர யாகம் புதன்கிழமை நடைபெற்றது. பக்தா்கள் கடன் தொல்லையில் இருந்து விடுபடவும், வியாபாரம் மற்றும் செல்... மேலும் பார்க்க

நெரிஞ்சிப்பேட்டையில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு

ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் எம்.பி. என்.ஆா்.கோவிந்தராஜா் தலைமையில் திமுகவினா், பொதுமக்கள் புதன்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா். பெருந்துறையில் வேளாண்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்றும்போது தகராறு: சத்தியமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது புகாா்தாரரை தாக்கியவா்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி சத்தியமங்கலம் காவல் நிலையத்தை ... மேலும் பார்க்க