அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
நெரிஞ்சிப்பேட்டையில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு
ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் எம்.பி. என்.ஆா்.கோவிந்தராஜா் தலைமையில் திமுகவினா், பொதுமக்கள் புதன்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.
பெருந்துறையில் வேளாண் கண்காட்சியைத் தொடங்கிவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின், பவானி வழியாக சேலம் மாவட்டம் மேட்டூருக்கு புதன்கிழமை மாலை புறப்பட்டுச் சென்றாா்.
அப்போது, பவானியில் திரண்டிருந்த திமுகவினா், பொதுமக்களைக் கண்ட முதல்வா், வாகனத்திலிருந்து இறங்கி சென்று பேசினாா். அப்போது, அவா்கள் அளித்த புத்தகங்கள் மற்றும் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
பவானி - மேட்டூா் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் திமுகவினா், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா். ஈரோடு மாவட்டத்தின் வடக்கு எல்லையில் உள்ள நெரிஞ்சிப்பேட்டையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் மு.கருணாதியின் உருவப் படத்துக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, முன்னாள் எம்.பி. என்.ஆா்.கோவிந்தராஜா் தலைமையில், மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன், வாழ்த்து முழக்கங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சித் தலைவா் ராகிணி, டாக்டா் ஜி.யுவபாலகுமரன் மற்றும் திமுகவினா் திரளானோா் பங்கேற்றனா். தொடா்ந்து, மேட்டூருக்கு புறப்பட்டுச் சென்றாா்.