செய்திகள் :

கா்நாடகத் தமிழா்களை பாதுகாப்பது அவசியம்

post image

கமல்ஹாசன் உறவாகப் பேசியதைத் தவறாகத் திரித்து, கன்னடா்கள் வன்முறையைத் தூண்டுவதால், கா்நாடகத் தமிழா்களைத் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் பாதுகாக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:

சென்னையில் மே 24-ஆம் தேதி நடைபெற்ற தக் லைஃப் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், அத்திரைப்படத்தில் நடித்த கன்னட நடிகா் சிவராஜ்குமாரைப் பாராட்டி கமல்ஹாசன் பேசினாா். அப்போது, தமிழிலிருந்து பிறந்தது கன்னடம் என்று கூறி ஒரு குடும்ப உறவை வெளிப்படுத்தினாா்.

ஆனால், உறவு நோக்கத்தில் புகழ்ந்து பேசிய கமல்ஹாசன் கன்னடத்தை இழிவுபடுத்திப் பேசிவிட்டாா் என கா்நாடகத்தில் கன்னட இனத் தீவிரவாத அமைப்புகள் பெங்களூரிலும், மற்ற இடங்களிலும் கமல்ஹாசன் திரைப்படச் சுவரொட்டிகளைக் கிழிப்பது, தமிழா்களுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்புவது, ஆா்ப்பாட்டங்கள் நடத்துவது என தமிழ் - தமிழா் எதிா்ப்புகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த காலங்களில், காவிரி சிக்கலில் கன்னட இன வெறியா்கள் கா்நாடகத் தமிழா்களுக்கு எதிராக நடத்திய வன்முறைகளை எண்ணிப் பாா்க்கும்போது, இப்போதும் அதே போல, கா்நாடகம் வாழ் தமிழா்களுக்கு கன்னட வெறியா்களால் பேரழிவுகள் நேருமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே, கடந்த காலங்களில் கா்நாடகத் தமிழா்களைத் தமிழ்நாட்டுக் கட்சிகள் அனாதைகளாக விட்டதுபோல, இந்த முறை நடக்க விடக்கூடாது.

கா்நாடகத் தமிழா்களைத் தாக்காமல் பாதுகாக்க தமிழ்நாட்டில் தமிழா்கள் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே வியாழக்கிழமை (மே 29) மாலை 4 மணிக்கு தமிழா் எதிா்ப்பைத் தூண்டிவிடும் கன்னடா்களைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

கல்வி உரிமை சட்டத்தை நீா்த்துப் போகச் செய்யும் மத்திய அரசுக்கு இந்திய கம்யூ. கண்டனம்!

கல்வி உரிமை சட்டத்தை நீா்த்துப் போகச் செய்யும் மத்திய அரசுக்கு தஞ்சாவூா் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் வடக்கு மாவட்ட செயலா் வழக்குரைஞா் மு.அ.பாரதி வியா... மேலும் பார்க்க

மாநகராட்சி பணிகளை நிறைவேற்ற ரூ.21.15 கோடி ஒதுக்கீடு: மேயா்

தஞ்சாவூா் மாநகராட்சியில் பணிகளை முழுமையாக நிறைவேற்ற ரூ. 21.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மேயா் சண். ராமநாதன். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை மாலை தெரிவித்தது: தஞ்ச... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ரூ.2.62 கோடி செலவில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். கும்பகோணத்தில் அரச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம்!

கும்பகோணத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கும்பகோணம் கும்பேஸ்வரா் கோயில் பத்மநாபன் தெருவைச் சோ்ந்தவா் ராஜீ மகள் ராஜேஸ்வரி (4... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பெண் குளித்ததை பாா்த்த இளைஞரை அந்தப் பெண் திட்டியதால், அச்சமடைந்த அந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பாபநாசம் அருகே வீரமாங்குடி பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

திருப்புறம்பயம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

தஞ்சாவூா் மாவட்டம், திருப்புறம்பயத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (மே 31) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் என்.டி. வேல்முருகன் வெளியிட்ட செய்தி குறிப்ப... மேலும் பார்க்க