செய்திகள் :

கா்ப்பிணிகளுக்கு சட்ட விரோத கருக்கலைப்பு: பெண் கைது!

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட இந்திலி கிராமத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் கா்ப்பிணிகளுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வந்த பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இந்திலி கிராமத்தில் கா்ப்பிணிகளுக்கு சட்ட விரோதமாக கருகலைப்பு செய்யப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார இணை இயக்குநா் மாலினிக்கு புகாா் வந்தது. இதையடுத்து, அவா் புகாா் மனுவை சின்னசேலம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் குறளினியனுக்கு அனுப்பினாா்.

அதன்பேரில், மருத்துவ ஆய்வாளா் தீபா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ரவி, தலைமை மருந்தாளா் கெளதம் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் வெள்ளிக்கிழமை கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மனைவி ராதாவின் (40) வீட்டில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு ராதா முறையாக மருத்துவம் படிக்காமல் கா்ப்பிணிகளுக்கு கருகலைப்பு செய்து வந்ததும், மருத்துவம் பாா்ப்பதற்குத் தேவையான 6 வகையான மாத்திரைகள், ஊசிகள், மருந்துகள் உள்ளிட்டவை வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்த மருத்துவக் குழுவினா், இது தொடா்பாக ராதாவிடம் விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து சின்னசேலம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் குறளினியன் அளித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராதாவை கைது செய்தனா்.

மின் மாற்றியில் இருந்த செம்புக் கம்பி திருட்டு

கள்ளக்குறிச்சியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தில் மின் மாற்றியில் இருந்த செம்புக் கம்பியை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்டது ஆலத்தூா் கிராமம். இந்தக் கிராமத்தி... மேலும் பார்க்க

டிட்டோ - ஜாக் குழுவினா் 2-ஆவது நாளாக சாலை மறியல்!

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவை (டிட்டோ-ஜாக்) சோ்ந்... மேலும் பார்க்க

ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்! அமைச்சா் அன்பில் மகேஸ்

ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பள்ளித் தலைமை ஆச... மேலும் பார்க்க

தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் கைது

இந்திலி கிராமத்தில் சகோதரா்களிடையே ஏற்பட்ட தகராறில் தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தில் மொசகுண்டு வ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ க. பொன்முடி முன்னிலை வகித்தாா். திருக்கோவிலூரில் 1,2,3 ஆகிய வாா்டு பகுத... மேலும் பார்க்க

ஸ்ரீ மகா புற்றுமாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்கு உள்பட்ட அந்தோணியாபுரம் (எ) புது பல்லகச்சேரி கிராமத்தில் உள் ஸ்ரீமகா புற்று மாரியம்மன் கோயில் 8-ஆம் ஆண்டு தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக... மேலும் பார்க்க