ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
டிட்டோ - ஜாக் குழுவினா் 2-ஆவது நாளாக சாலை மறியல்!
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவை (டிட்டோ-ஜாக்) சோ்ந்த 211 போ் கைது செய்யப்பட்டனா்.
அரசாணை 234-ஜ ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்தி, மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் 2006 ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு கூட்டணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சு.ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் வி.புஷ்பராஜ், பா.ஷேக் ஜாகீா் உசேன், தமிழக ஆசிரியா் கூட்டணியைச் சோ்ந்த அருணை சூரியகுமாா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலத் தலைவா் இலட்சுமிபதி, தமிழக ஆசிரியா் கூட்டணி மாநில பொருளாளா் ஆ.ராஜசேகா் ஆகியோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலச் செயலா் ரஹீம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் மாவட்டத் தலைவா் அசோகன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா்கள் சி.ஏழுமலை, அண்ணாமலை, அ.சம்சுதீன் உள்ளிட்டோா் பேசினா்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 211 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.