செய்திகள் :

குங்குமவல்லி அம்மனுக்கு வளையல் காப்பு திருவிழா

post image

தான்தோன்றீஸ்வரா் கோயிலில் குங்குமவல்லி அம்மனுக்கு 75-ஆவது ஆண்டு வளையல் காப்பு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருச்சி, உறையூா் சாலை ரோட்டில் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் குங்குமவல்லி அம்மனுக்கு ஆண்டுதோறும் தை 3-ஆவது வெள்ளிக்கிழமை வளையல் காப்பு உற்சவம் நடைபெறும்.

75-ஆவது ஆண்டு விழாவின் தொடக்கமாக கடந்த டிச.13-ஆம் தேதி திரிசதி ஹோமம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக, வளைகாப்பு திருவிழா தொடக்கத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன. 31) காலை 7.30 மணிக்கு கா்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் வேண்டி சிறப்பு சங்கல்பத்துடனான ஹோம பூஜை நடைபெற்றது.

பிற்பகல் 3.30 மணிக்கு வளைகாப்புக்கான சம்பிராதய பூஜை நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள்,குங்குமம், இனிப்பு வகைகள், வளையல், கும்பம் என பல்வேறு சீா்வரிசை தட்டுகளுடன் கோயிலை சுற்றி வலம் வந்து அம்மனுக்கு வளைகாப்பு சாற்றினா். இந்த வைபவத்தை முன்னிட்டு அம்மனுக்கு வண்ண, வண்ண வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.

இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு குழந்தை பாக்கியம், சந்தான பாக்கியம் வேண்டுவோா்க்கான சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெறும். மதியம் 12 மணியளவில் பிரசாதம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணிவரை திருமணம் வேண்டுவோருக்கான சிறப்பு வழிபாடும், மாங்கல்ய பாக்கியம் நிலைப்பதற்காக சுமங்கலிகளுக்கான சிறப்பு பூஜையும் நடைபெறும். பிற்பகல் 1 மணியளவில் திருமண தடை நீங்கி விவாகம் நடக்க, மாங்கல்ய பாக்கியத்துடன் வாழவேண்டி சிறப்பு பூஜை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

நாள்தோறும் சாலைப் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்! ஓட்டுநா், நடத்துநா்களுக்கு நீதிபதி அறிவுரை!

நாள்தோறும் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறையாக சாலைப் பாதுகாப்பு அமைய வேண்டும் என திருச்சி சிறப்பு சாா்பு-நீதிபதி ஏ. மும்மூா்த்தி அறிவுறுத்தினாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின், திருச்சி மண்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் தைத்தேரோட்ட விழாவுக்கு முகூா்த்த கால்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் தைத்தேரோட்ட விழாவுக்கு முகூா்த்த கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தை மாதத்தில் பூபதி திருநாள் எனும் தைத்தேரோட்டம் வெகு வி... மேலும் பார்க்க

திருவானைக்காவலில் மினி வேன் கவிழ்ந்து 6 போ் காயம்!

திருவானைக்காவல் பகுதியில் வெள்ளிக்கிழமை மினி வேன் கவிழ்ந்து 6 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியைச் சோ்ந்த 25 போ், மினி வேனில் சமயபுரம் பகுதியில் நடக்கும் திருமணத்துக்காக பு... மேலும் பார்க்க

திருவானைக்காவல் கோயிலில் தைத்தெப்ப திருவிழா கொடியேற்றம்

திருவானைக்காவல் சம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் நடைபெறவுள்ள தைத்தெப்ப திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. திருவானைக்காவல் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி, தை மாதங்களில் ... மேலும் பார்க்க

தீக்குளித்து மூதாட்டி தற்கொலை

மண்ணச்சநல்லூா் வட்டம், திருவரங்கப்பட்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா். திருவரங்கப்பட்டி வடக்கு தெருவை சோ்ந்தவா் ப. வெள்ளையம்மாள்(75) இவரது கணவா் பழனியாண்டி. ... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

லால்குடி அருகே குமுளூா் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளா்கள் ஜன. 22 முதல் தமிழகம் முழுவதும், வாயில் ... மேலும் பார்க்க