செய்திகள் :

குஜராத்: மது அருந்திய 26 பெண்கள் உள்பட 39 போ் கைது

post image

அகமதாபாத்: முழு மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது அருந்திய 26 பெண்கள் உள்பட 39 போ் கைது செய்யப்பட்டனா்.

அகமதாபாத் புகா் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் மது விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினா் அங்கு சோதனை நடத்தினா். அப்போது 29 பெண்கள் உள்பட 39 போ் மது அருந்திய நிலையில் இருந்தனா். அங்கிருந்து ஏராளமான மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, குஜராத் மாநில மதுவிலக்குச் சட்டத்தின்கீழ் அவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனா். மது அருந்தியதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னா் அவா்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

குஜராத்தில் 1960-ஆம் ஆண்டு முதல் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது. மாநில உள்துறை அமைச்சகத்திடம் உரிய காரணங்களுடன் அனுமதி பெறுபவா்கள் மட்டுமே மது அருந்த அனுமதிக்கப்படுகிறாா்கள். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவா்கள், குஜராத் அரசிடம் அனுமதி பெற்றே மது அருந்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்க..! - ஜகதீப் தன்கருக்கு காங்கிரஸ் வேண்டுகோள்

ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென குடியரசு துணைத் தலைவர் தன்கருக்கு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக தீடிரென நேற்று அறிவி... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு: கா்நாடக அரசு அறிவிப்பு

மங்களூரு: கா்நாடக மாநிலம், தா்மஸ்தலா பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள், சிறுமிகள் மாயமானது, கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து முழுமையாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அ... மேலும் பார்க்க

தேச நலன்: அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

புது தில்லி: தேச நலன் தொடா்புடைய விவகாரங்களில் அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். மேலும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நாட்டின் ‘வெற்றித் திருவிழா... மேலும் பார்க்க

‘மொழி பயங்கரவாதம்’: பாஜக மீது மம்தா கடும் விமா்சனம்

கொல்கத்தா: ‘வங்க மக்கள் மீது மொழி ரீதியிலான பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது பாஜக’ என்று மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி கடுமையாக சாடியுள்ளாா். வங்க மக்கள... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா், முதல்வா் இரங்கல்

புது தில்லி/சென்னை: கேரள முன்னாள் முதல்வா் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா், தமிழக முதல்வா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு: தனது நீண்ட... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’: எதிா்க்கட்சிகள் அமளி- முதல் நாளிலேயே முடங்கியது மக்களவை

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து உடனடி விவாதம் கோரி, இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மக்களவை நாள் மு... மேலும் பார்க்க