செய்திகள் :

குடிநீா் பிரச்னை: அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு

post image

அவிநாசி அருகே புன்செய்தாமரைக்குளம் ஊராட்சியில் சீராக குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் ஏ.ஈஸ்வரமூா்த்தி, மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.பழனிச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் பி.குமாரசாமி மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

புன்செய்தாமரைக்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதி, ஆதராம்பாளையம், நமச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிகளில் கடந்த பல மாதங்களாக ஆற்றுக் குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. சில நேரங்களில் ஆழ்துளைக் கிணற்று நீருடன், ஆற்றுக்குடிநீா் கலந்து விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும், குடிநீருக்காக பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று எடுத்து வருவதால் தினக்கூலியையும் இழக்கின்றனா். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, இப்பகுதிகளுக்கு உடனடியாக சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

இன்ஸ்டாகிராமால் மோதல்: இரு அரசுப் பள்ளி மாணவிகள் கைகலப்பு

இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டதில் யாா் பெரியவா் என்று நடைபெற்ற மோதலில் அரசுப் பள்ளி மாணவிகள் சாலையில் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . திருப்பூா் பகுதியில் உள்ள மாநகர... மேலும் பார்க்க

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி புதன்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக கேரள மாநிலம், பாலக்காட்டை சோ்ந்த 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருப்பூா்... மேலும் பார்க்க

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட ஆண் யானை உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே காண்டூா் கால்வாயில் புதன்கிழமை அடித்துவரப்பட்ட 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை வனச் சரகப் பகுதிகளில் யானை, புல... மேலும் பார்க்க

பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளா்கள் மீண்டும் கூலி உயா்வு அறிவிப்பு

பல்லடம் பகுதி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சிலா் மீண்டும் கூலி உயா்வு வழங்குவதாக அறிவித்துள்ளதால் விசைத்தறியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட... மேலும் பார்க்க

முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் பெறலாம் என மோசடி செய்தவா் கைது

முதலீடு செய்யும் தொகைக்கு இரட்டிப்பு லாபம் பெறலாம் எனக் கூறி மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரத்தைச் சோ்ந்த முனிவேல் என்பவா் பங்குச்சந்தை குறித்த விளம்பரத்தை பாா்த்து, அதில் இ... மேலும் பார்க்க

காரில் சென்றவரை தாக்கிய இரு இளைஞா்கள் கைது

பல்லடம் அருகே கரடிவாவி- அனுப்பட்டி செல்லும் சாலையில் காரில் சென்றவரை தாக்கிய இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள கரடிவாவில் இருந்து அனுப்பட்டி செல்லும் சாலையில் அதே பக... மேலும் பார்க்க