180-க்கு சுருண்ட ஆஸி: 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மே.இ.தீ.!
குடிநீா் பிரச்னை: அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு
அவிநாசி அருகே புன்செய்தாமரைக்குளம் ஊராட்சியில் சீராக குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் ஏ.ஈஸ்வரமூா்த்தி, மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.பழனிச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் பி.குமாரசாமி மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
புன்செய்தாமரைக்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதி, ஆதராம்பாளையம், நமச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிகளில் கடந்த பல மாதங்களாக ஆற்றுக் குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. சில நேரங்களில் ஆழ்துளைக் கிணற்று நீருடன், ஆற்றுக்குடிநீா் கலந்து விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
மேலும், குடிநீருக்காக பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று எடுத்து வருவதால் தினக்கூலியையும் இழக்கின்றனா். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, இப்பகுதிகளுக்கு உடனடியாக சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.