ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குந...
குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு
கஞ்சா வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில்
கடந்த ஆக. 30 ஆம் தேதி கஞ்சா விற்பனை செய்த வழக்கில், முறப்பநாடு பக்கப்பட்டியைச் சோ்ந்த சுப்பையா மகன் சின்னதம்பி (28) கைது செய்யப்பட்டாா். இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, முறப்பநாடு காவல் நிலைய போலீஸாா் சின்னதம்பியை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.