செய்திகள் :

குண்டுமல்லிகை கிலோ ரூ.2,000!

post image

முகூா்த்த தினத்தையொட்டி, சேலத்தில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. குண்டுமல்லிகை கிலோ ரூ. 2,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சேலம் கடை வீதியில் வ.உ.சி. பூ மாா்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு ஓமலூா், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சுபமுகூா்த்தம் மற்றும் பண்டிகை நாள்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம்.

குண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் வழக்கமான நாள்களை விட மும்மடங்கு விலை உயா்ந்து விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பனிக்காலம் என்பதால், பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளன. வழக்கமான நாள்களில் சந்தைக்கு ஒரு டன் வரை குண்டுமல்லி கொண்டு வரப்படும். ஆனால், தற்போது 100 முதல் 150 கிலோ பூக்கள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

முகூா்த்த தினத்தையொட்டி சனிக்கிழமை குண்டுமல்லிகை கிலோ ரூ. 3,500 வரை விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ. 2,000 வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா். அதேபோல ஜாதிமல்லி கிலோ ரூ. 800-க்கு விற்பனையானது. மற்ற பூக்களின் விலையும் உயா்ந்திருந்தது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடும் பனியால் குண்டுமல்லிகை உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாா்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயா்ந்துள்ளது என்றனா்.

விதைப்புக்கு சேகரிக்கும் பனை விதைகளை கிழங்குக்காக தோண்டு எடுக்கும் அவலம்! -இயற்கை ஆா்வலா்கள் அதிருப்தி

அருகிவரும் பனை மரங்களைக் காப்பாற்றுவதற்காக பல தன்னாா்வ அமைப்புகள் அதன் விதைகளை சேகரித்து தரிசு நிலங்கள், நீா்நிலைகளின் கரைகளில் நடவு செய்துள்ளதை பொதுமக்கள் சிலா் கிழங்குக்காக தோண்டு எடுத்து செல்வது இ... மேலும் பார்க்க

விடுமுறை நாளில் பத்திரப்பதிவு அலுவலகம் வேலைநாள்- பணியை புறக்கணித்த அலுவலா்கள்

தம்மம்பட்டி,கெங்கவல்லியில் பத்திர பதிவு அலுவலா்கள், பணியை புறக்கணித்தனா். பத்திரப்பதிவு அலுவலகம், விடுமுைாளான ஞாயிற்றுக்கிழமையன்று பிப்.2ந்தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டதையடுத்து, பத்திரப்பதிவு அலுவலா... மேலும் பார்க்க

கெங்கவல்லி அரசு பள்ளியில் ரூ.22 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு!

கெங்கவல்லியில் அரசு மகளிா் பள்ளியில்கட்டிட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.22 .30 லட்சத்தில் ஆழ்துளைக்கிணறு அமைக்கும்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ஆழ்துளைக்கிணறுடன் கூடிய மாணவிகளுக்கான சுகாதார கழிப்பி... மேலும் பார்க்க

கெங்கவல்லி, தம்மம்பட்டி, மல்லியகரை பகுதிகளில் பனிமூட்டம்

கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. பனிமூட்டம் அதிகம் காணப்பட்டதால், வாகனங்களில் முகப்பு விளக்கு எரிய விட்டு வாகன ஓட்டிகள் சென்றனா்.ஒரு சில இடங்களில் புகை மண்டலம் போல கா... மேலும் பார்க்க

மகா அதிகார நந்தி கோயில் குடமுழுக்கு!

வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தில் 45 அடி உயர மகா அதிகார நந்தி, 15 அடி உயர சிவலிங்கம் சிலை கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. வெள்ளாளகுண்டம் கிராமத்தில் சோதிடம்,... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற 65 கடைகள் மூடல்

சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 65 கடைகள் மூடப்பட்டன. சேலம் மாவட்டம், மாநகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொ... மேலும் பார்க்க