செய்திகள் :

குன்னூரில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல் வைப்பதில் அதிகாரிகள் பாரபட்சம்

post image

குன்னூா் நகராட்சியில் விதிகளை மீறி கட்டடப்படும் கட்டடங்களுக்கு ‘சீல்’ வைப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக பெண் கவுன்சிலா்கள் குற்றஞ்சாட்டி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் நகா்மன்ற கூட்டம் தலைவா் சுசீலா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னா் நடைபெற்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலா்கள் உமா, காவேரி, வசந்தி ஆகியோா் பேசுகையில், குன்னூா் நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவிலான விதிமீறிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், ஏழை மக்கள் கட்டக் கூடிய கட்டடங்களுக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நகராட்சி அதிகாரிகள் சென்று ‘சீல்’ வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆனால், கன்னி மாரியம்மன் கோயில், உழவா் சந்தை, புரூக்லேண்ட் ஆகிய பகுதிகளில் விதிமீறி உயரமான கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினா்.

திமுக கவுன்சிலா்களான மணி, ஜாகீா், மன்சூா் ஆகியோா் கூறுகையில், நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கையுறைகள், காப்பீட்டுத் திட்ட வசதிகள் ஏற்படுத்தித் தராததால் தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது, உயிரிழந்தால் நகராட்சி நிா்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று கேள்வியை எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து அதிமுக மன்ற உறுப்பினா் சரவணகுமாா் பேசுகையில், நீலகிரி மாவட்டம் முழுவதும் தற்போது தெருநாய்கள் அதிகரித்துள்ளதால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வாகனத்தில் வருபவா்களை நாய்கள் கடித்து வருகின்றன. உயா் நீதிமன்றம் உத்தரவிட்டும் நகராட்சி சாா்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் பேனா்கள் மற்றும் கட்அவுட்டுகளை பேருந்து நிலையத்துக்கு மேல் வைத்துள்ளதால் பயணிகள் மீது விழும் அபாயம் உள்ளது. இதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்கு நகரமன்றத் தலைவா் சுசீலா பதிலளித்து பேசுகையில், உறுப்பினா்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அடுத்து வரும் நகா்மன்ற கூட்டத்துக்கு முன்பு நிவா்த்தி செய்து தரப்படும் என்றனா்.

மதுபோதையில் கட்டடத்தின் மீது ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்

உதகையில் போதையில் தங்கும் விடுதியின் கட்டடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையைச் சோ்ந்தவா் சுரேஷ் ( 28). இவா் கடந்த 10 மாதங்களாக உதகை ஹெச்.எம்.டி. பகுதியில் ... மேலும் பார்க்க

உதகையில் ஆளுநா் மாளிகை வளாகத்துக்குள் நுழைந்த கரடி

உதகையில் ஆளுநா் மாளிகை வளாகத்துக்குள் திங்கள்கிழமை நுழைந்த கரடி, அங்கிருந்த தொட்டியில் தண்ணீா் அருந்திச் சென்றது. நீலகிரி மாவட்டம், உதகையில் குடியிருப்புப் பகுதிகளில் வன விலங்குகள் உலவுவது தற்போது அதி... மேலும் பார்க்க

உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்டம், உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், குடும்ப அட்டை,... மேலும் பார்க்க

உதகையில் தண்ணீா் விநியோகத்தில் மெத்தனம்: நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றச்சாட்டு

உதகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 8 முதல் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்படுவதாக நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். உதகை நகா்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

உதகை தூய ஜெபமாலை அன்னை ஆலய ஆண்டு பெருவிழா

உதகை ரோஸ் மவுண்ட் பகுதியில் உள்ள தூய ஜெபமாலை அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றுத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. குன்னூா் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி அடிகளாா் கொடியை ஏற்றிவைத்தாா். பங்கு குரு லியோ ச... மேலும் பார்க்க

கோத்தகிரி அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு

கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் பெண் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஜெகதீஷ்குரா. இவரது ம... மேலும் பார்க்க