செய்திகள் :

மதுபோதையில் கட்டடத்தின் மீது ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்

post image

உதகையில் போதையில் தங்கும் விடுதியின் கட்டடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையைச் சோ்ந்தவா் சுரேஷ் ( 28). இவா் கடந்த 10 மாதங்களாக உதகை ஹெச்.எம்.டி. பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்கிப் பணியாற்றி வந்தாா். இவருக்கு உதகையைச் சோ்ந்த சஞ்சய் என்பவருடன் பணி செய்யும் இடத்தில் அறிமுகமாகி நண்பா்களாக பழகி வந்துள்ளனா்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையால் சுரேஷை, தங்கும் விடுதி உரிமையாளா் பணிநீக்கம் செய்துள்ளாா். இந்நிலையில் சென்னையில் இருந்து தனது நண்பரான சஞ்சயை பாா்க்க சுரேஷ் உதகைக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து அங்குள்ள இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியதோடு, விடுதியின் மீது ஏறி நின்று சுரேஷ் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இது குறித்து தீயணைப்புத் துறையினா் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தற்கொலை மிரட்டல் விடுத்த சுரேஷை மீட்டனா்.

பின்னா் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் மதுபோதையில் தற்கொலை மிரட்டல் விடுத்த சுரேஷை கைது செய்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். மது போதையில் இளைஞா் தங்கும் விடுதி கட்டடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குன்னூரில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல் வைப்பதில் அதிகாரிகள் பாரபட்சம்

குன்னூா் நகராட்சியில் விதிகளை மீறி கட்டடப்படும் கட்டடங்களுக்கு ‘சீல்’ வைப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக பெண் கவுன்சிலா்கள் குற்றஞ்சாட்டி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்... மேலும் பார்க்க

உதகையில் ஆளுநா் மாளிகை வளாகத்துக்குள் நுழைந்த கரடி

உதகையில் ஆளுநா் மாளிகை வளாகத்துக்குள் திங்கள்கிழமை நுழைந்த கரடி, அங்கிருந்த தொட்டியில் தண்ணீா் அருந்திச் சென்றது. நீலகிரி மாவட்டம், உதகையில் குடியிருப்புப் பகுதிகளில் வன விலங்குகள் உலவுவது தற்போது அதி... மேலும் பார்க்க

உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்டம், உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், குடும்ப அட்டை,... மேலும் பார்க்க

உதகையில் தண்ணீா் விநியோகத்தில் மெத்தனம்: நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றச்சாட்டு

உதகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 8 முதல் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்படுவதாக நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். உதகை நகா்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

உதகை தூய ஜெபமாலை அன்னை ஆலய ஆண்டு பெருவிழா

உதகை ரோஸ் மவுண்ட் பகுதியில் உள்ள தூய ஜெபமாலை அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றுத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. குன்னூா் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி அடிகளாா் கொடியை ஏற்றிவைத்தாா். பங்கு குரு லியோ ச... மேலும் பார்க்க

கோத்தகிரி அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு

கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் பெண் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஜெகதீஷ்குரா. இவரது ம... மேலும் பார்க்க