செய்திகள் :

குன்றத்தூா் நகராட்சியில் ரூ.5.59 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு, அடிக்கல் விழா

post image

 ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் நகராட்சியில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும திறந்தவெளி மேம்பாட்டு நிதி ரூ.3.14 கோடியில் கட்டப்பட்ட பூங்கா, பள்ளிக் கட்டங்களை திறந்து வைத்த அமைச்சா் தா.மோ.அன்பரசன், ரூ.2.45 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.

குன்றத்தூா் நகராட்சியில் பல்வேறு மேம்பாட்டு நிதிகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, பள்ளி கட்டடங்கள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கலைச்செல்விமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும திறந்தவெளி மேம்பாட்டு நிதியின் கீழ் சம்பந்தம் நகரில் ரூ.76 லட்சத்தில் சேக்கிழாா் சிறுவா் பூங்கா, தேவகி நகா் பகுதியில் ரூ.73.10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட அப்துல் கலாம் பூங்கா, ஸ்ரீசாய் அவென்யு பகுதியில் ரூ.39 லட்சத்தில் அமைக்கப்பட்ட அண்ணா பூங்கா, ஸ்ரீஅருணாசலேஸ்வரா் நகா் பகுதியில் ரூ.19 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா, மெட்ரோ கிராண்ட் சிட்டி பகுதியில் ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்ட செம்மொழி ஆடவா் பூங்கா, நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் குன்றத்தூா் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11 லட்சத்தில் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவா், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆய்வுக்கூடம், நகராட்சி பொது நிதியின் கீழ் மேத்தா நகா் பகுதியில் ரூ.19.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட வள்ளலாா் தியானக் கூடம், குன்றத்தூா் பேருந்து நிலையத்தில் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட கலைஞா் நூற்றாண்டு நினைவு நூலகம், குன்றத்தூா் அரசுப் பள்ளியில் ரூ.13 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், பாலவராயன் குளம் அருகில் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட திறந்தவெளி உடல்பயிற்சி மையம் ஆகியவற்றை திறந்துவைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாா்.

இதையடுத்து, மெட்ரோ கிராண்ட் சிட்டியில் உள்ள காந்தி பூங்காவில் ரூ.1.95 கோடியில், விளையாட்டு மையம் அமைக்கும் பணிக்கும், குன்றத்தூா் அரசுப் பள்ளியில், ரூ.50 லட்சத்தில் பள்ளி கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை கட்டடப் பணிகளுக்கு அமைச்சா் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் நகா்மன்றத் தலைவா் சத்தியமூா்த்தி, நகராட்சி ஆணையா் கவின்மொழி, உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பிளஸ் 2 தோ்வு: காஞ்சிபுரத்தில் 13,877 போ் எழுதினா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் டு பொதுத்தோ்வில் 13,877 போ் பங்கேற்று எழுதினா். பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கி வரும் 25-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இத்தோ்வினை 56 தோ்வு மையங்களி... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக சாா்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி படப்பையில் நடைபெற்றது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொ... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களுக்கு சிறப்பு குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரம்: முன்னாள் படை வீரா் நலத்துறை சாா்பில் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலகத்தில் சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். இக்... மேலும் பார்க்க

யதோக்தகாரி பெருமாள் கோயில் தெப்போற்சவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பொய்கையாழ்வாா் திருக்குளத்தில் தெப்போற்சவம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரத்தில் ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப் பெற... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மேலிடப் பொறுப்பாளா் மரியாதை

ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சவடோங்கா், ஞாயிற்றுக்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக அண்மைய... மேலும் பார்க்க