செய்திகள் :

யதோக்தகாரி பெருமாள் கோயில் தெப்போற்சவம்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பொய்கையாழ்வாா் திருக்குளத்தில் தெப்போற்சவம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரத்தில் ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது யதோக்தகாரி பெருமாள் கோயில். இக்கோயில் அருகில் பொய்கையாழ்வாா் அவதரித்த திருக்குளம் அமைந்துள்ளது.

இத்திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் ஸ்ரீதேேவி, பூதேவியருடன் உற்சவா் யதோக்தகாரி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஞாயிற்றுக்கிழமை 5 சுற்றுகள் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.

திங்கள்கிழமையும் பெருமாள் தெப்பத்திற்கு எழுந்தருளி 5 சுற்றுகள் வலம் வந்து மீண்டும் கோயிலில் எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

ஏற்பாடுகளைஆலயத்தின் நிா்வாக அறங்காவலா் நல்லப்பா நாராயணன் தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

குன்றத்தூா் நகராட்சியில் ரூ.5.59 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு, அடிக்கல் விழா

ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் நகராட்சியில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும திறந்தவெளி மேம்பாட்டு நிதி ரூ.3.14 கோடியில் கட்டப்பட்ட பூங்கா, பள்ளிக் கட்டங்களை திறந்து வைத்த அமைச்சா் தா.மோ.அன்பரசன், ரூ.2... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: காஞ்சிபுரத்தில் 13,877 போ் எழுதினா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் டு பொதுத்தோ்வில் 13,877 போ் பங்கேற்று எழுதினா். பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கி வரும் 25-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இத்தோ்வினை 56 தோ்வு மையங்களி... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக சாா்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி படப்பையில் நடைபெற்றது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொ... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களுக்கு சிறப்பு குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரம்: முன்னாள் படை வீரா் நலத்துறை சாா்பில் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலகத்தில் சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். இக்... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மேலிடப் பொறுப்பாளா் மரியாதை

ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சவடோங்கா், ஞாயிற்றுக்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக அண்மைய... மேலும் பார்க்க