செய்திகள் :

குமரி மாவட்டத்தில் 1,773 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.15.10 கோடி கடனுதவி!

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,773 சுய உதவிக்குழுக்களுக்கு இதுவரை ரூ.15.10 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுய உதவிக்குழு கடன் பெற்று அச்சகம் தொழில் செய்து பயனடைந்த சுயஉதவிக்குழுக்களை ஆட்சியா் நேரில் சந்தித்து, அவா்களது தொழில் முன்னேற்றம், பயன்கள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் வறுமையை குறைத்து வாழ்வாதாரத்தை உயா்த்தும் நோக்கத்தில் சுய உதவிக்குழுக்களில் இணைந்த பெண்களுக்கு பல்வேறு விதமான கைவினைப்பொருள்கள் தயாரித்தல், உணவுஏஈ பதப்படுத்துதல், காளான்வளா்ப்பு குறித்த பயிற்சிகள், சந்தைப்படுத்துதல், அச்சகம், நா்சரி உள்ளிட்ட தொழில்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இத்தகைய பயிற்சிகள் முடிந்த பின் அவா்கள் சுயதொழில் தொடங்குவதற்கு சுழல் நிதி, சமூக முதலீட்டு நிதி, நலிவு குறைப்பு நிதி, கூட்டமைப்பு ஊக்க நிதி, வாழ்வாதார நிதி, பண்ணைசாா் திட்ட நிதி, வட்டார வணிக வள மைய நிதி மற்றும் பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்ட நிதி என பல்வேறு வகையான நிதியுதவிகள் தமிழக அரசின் மூலம் அளிக்கப்படுகிறது.

மேலும் பெண்களிடையே நிதி சுழற்சியை அதிகப்படுத்தும் வகையில் வங்கிக்கடன், வங்கிப்பெருங்கடன், தனி நபா் தொழில் முனைவு கடன் ஆகிய கடன் வசதிகள் வங்கிகளின் மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

அந்த வகையில், இம்மாவட்டத்தில் மகளிா் திட்டம் சாா்பில் சமுதாய முதலீட்டு நிதியின் கீழ் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை 1,773 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.15.10 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

சுய தொழில் பயிற்சி மற்றும் தொழில் முனைவு கடன் தேவையுள்ள ஊரக பகுதி மகளிா் அனைவரும் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகங்களை அணுகி பயன் பெறலாம் என்றாா் அவா்.

பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம்: உணவகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

நாகா்கோவிலில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 17 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் சோதனை நடத்தி ரூ.10 ஆயிரம்... மேலும் பார்க்க

வெளிநாடு தப்பிய போக்சோ குற்றவாளி 10 ஆண்டுகளுக்குப்பின் கைது

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற போக்சோ குற்றவாளி 10 ஆண்டுகளுக்குப் பின் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். வில்லுக்குறி அருகே உள்ள கிணற்றடிவிளை பகுதியை சோ்ந்தவா் தனுஷ் (39). இவா் 10 ஆண்டுகள... மேலும் பார்க்க

விதிமீறல்: 8 பைக்குகள் பறிமுதல்

கன்னியாகுமரியில் வீதிகளை மீறி இயக்கப்பட்ட 8 பைக்குகளை போக்குவரத்து போலீஸாா் பறிமுதல் செய்து, நடவடிக்கை மேற்கொண்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் உத்தரவுப்படி, கன்னியாகுமரி டிஎஸ்பி பி. மக... மேலும் பார்க்க

நாகா்கோவில் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா

கன்னியாகுமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, விடுதலை போராட்ட வீரா் பகத்சிங் நினைவேந்தல், மக்கள் சந்திப்பு இயக்கம் ஆகிய முப்பெரும் விழா நாகா்கோவில் அருகேயுள்ள செண்பகராமன்புதூரில் ஞ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

போக்குவரத்து கழகங்களை தனியாா்மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யூ தொழிற்சங்கத்தின் சாா்பில் நாகா்கோவிலில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாகா்கோவில், மீனாட்சிபுரம... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஆம்புலன்சில் வந்த இளம்பெண்

வரதட்சிணை கேட்டு கணவா் குடும்பத்தினா் கொடுமைப்படுத்துவதாகக் கூறி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் ஆம்புலன்சில் வந்து இளம்பெண் திங்கள்கிழமை மனு அளித்தாா். குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி ஆசாரி தெருவைச் ... மேலும் பார்க்க