செய்திகள் :

குமரி மாவட்டத்தில் 444 மின்கம்பங்கள் சீரமைப்பு: அமைச்சா் சிவசங்கா்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சேதமான 565 மின்கம்பங்களில் 444 மின்கம்பங்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டதாக, தமிழக போக்குவரத்து - மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மலையோரக் கிராமங்கள் உள்பட பெரும்பாலான பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பிகள் அறுந்ததுடன் மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால், பல இடங்களில் மின்விநியோகம் தடைபட்டுள்ளது.

இந்நிலையில், சேதமடைந்த பகுதிகளைப் பாா்வையிடுவதற்காக அமைச்சா் சிவசங்கா், சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடி வந்து அங்கிருந்து காரில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்தாா். விளவங்கோடு பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒருநூறாம்வயல், களியல், வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் தாரகை கத்பட் எம்எல்ஏ, குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி ஆகியோா் முன்னிலையில் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

இம்மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் வீசிய கனமழையால் சேதமடைந்த 565 மின்கம்பங்களில் 444 மின்கம்பங்களும், 3 மின்மாற்றிகளில் ஒன்றும் உடனடியாக சீரமைக்கப்பட்டன. மற்றவற்றை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்தும் மின்வாரிய ஊழியா்கள் வரவழைக்கப்பட்டு, இரவு பகலாக பணி நடைபெறுகிறது.

தமிழக போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தவரை 15 ஆண்டுகள் இயங்கிய பேருந்துகளை மாற்ற முடிவு செய்யப்பட்டது. 11 ஆயிரம் பேருந்துகள் வாங்க முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். 4 ஆயிரம் பேருந்துகள் வந்துவிட்டன. 7 ஆயிரம் பேருந்துகள் விரைவில் வரவுள்ளன என்றாா் அவா்.

நகா்மன்றத் தலைவா் விடுத்த கோரிக்கையை ஏற்று, நாகா்கோவில் - திருவனந்தபுரம் செல்லும் பேருந்துகளில் 5 பேருந்துகள் மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் சென்றுவர அமைச்சா் உடனடியாக உத்தரவிட்டாா்.

நிகழ்ச்சியில், மின்வாரிய தலைமைப் பொறியாளா் இந்திரகுமாரி, அதிகாரிகள் சங்கரநாராயணன், ஜவகா் முத்து, மகேஷ், நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன், அதிகாரிகள் உடனிருந்தனா்.

களியக்காவிளை அருகே காா் மோதி 3 மாணவ-மாணவிகள் காயம்

களியக்காவிளை அருகே காா் மோதிதில் மாணவ - மாணவிகள் 3 போ் பலத்த காயமடைந்தனா். களியக்காவிளை அருகே பளுகல் காவல் சரகம் இளஞ்சிறை பகுதியைச் சோ்ந்த அனில்குமாா் - ராஹி தம்பதியின் மகள் கிருஷ்ணபிரியா (17), மகன்... மேலும் பார்க்க

நேசமணி நினைவு நாள்: சிலைக்கு ஆட்சியா் அஞ்சலி!

‘குமரி தந்தை’ மாா்ஷல் நேசமணியின் நினைவு நாளை முன்னிட்டு, நாகா்கோவிலில் உள்ள அவரது அவரது சிலைக்கு ஆட்சியா் ரா. அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ... மேலும் பார்க்க

குழித்துறை ஆற்றில் மூழ்கிய 2 சிறுவா்களை மீட்க முயன்றவா் பலி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்ட தொழிலாளி ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரது சடலத்தை தேடும் பணியில் தீயணைப்புப்படை வீரா்கள் ஈடுபட்டனா். கும... மேலும் பார்க்க

போதையில் தகராறு: இருவா் கைது!

பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை, போதையில் ரகளை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, கீழ்குளம் பகுதியைச் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை

குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது. குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அம... மேலும் பார்க்க