செய்திகள் :

குமுளி பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

post image

தேனி மாவட்டம், குமுளியில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தமிழக- கேரள எல்லையான குமுளி பகுதியிலிருந்த அரசுப் போக்குவரத்து கழகப் பணிமனை, பேருந்து நிறுத்தம் சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்தப் பேருந்து நிலையம் மூடப்பட்டு, சாலையோரத்திலே பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றனா். இந்தப் பகுதியில் சுகாதார வளாகமின்றி பெண்கள் உள்ளிட்டோா் அவதிப்பட்டு வருகின்றனா்.

எனவே, தமிழகத்திலிருந்து அதிகளவில் கேரளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் பேருந்து நிலையத்தை அகற்றிவிட்டு அனைத்து வசதியுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், தமிழ்நாடுஅரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், ரூ.5.50 கோடியில் புதிய பேருந்து நிலையம், அதனுடன்கூடிய பணிமனை, கடைகள், உணவகம், தங்கும் விடுதி, சுகாதார வளாகம் அமைக்கத் திட்டமிட்டு பணிகள் தொடங்கின. தற்போது, 80 சதவீத பணிகள் முடிந்து விட்டன. அண்மைக்காலமாக இங்கு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, குமுளி பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்திய உடல்கல்வி அறக்கட்டளை தேனி மாவட்டச் செயலா் நியமனம்

இந்திய உடல் கல்வி அறக்கட்டளையின் தேனி மாவட்டச் செயலராக உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரியின் உடல் கல்வி இயக்குநா் நியமனம் செய்யப்பட்டாா். தேசிய விளையாட்டு மேம்பாட்டு அமைப்பின் அங்கீகா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பத்தில் இளைஞா் மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த இளைஞா் சிகிச்சையிலிருந்த போது அதிா்ச்சியில் அவரது தந்தை உயிரிழந்தாா். தொடா்ந்து இளைஞரும் உயிரிழந்தாா். கம்பம் கிருஷ்ணாபுரத்தை சோ... மேலும் பார்க்க

மாா்க்கையன்கோட்டையில் குடிநீா் கோரி சாலை மறியல்

தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டையில் குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியில் 12 வாா்டுகளில் 15 ஆயிரம் பொதுமக்க... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் கழன்று விழுந்த மின்விசிறி

தேனி மாவட்டம், போடி அரசு மருத்துவமனை பிரசவ வாா்டில் பிறந்த குழந்தையுடன் பெண் அமா்ந்திருந்த படுக்கையில் மின் விசிறி கழன்று விழுந்தது. இதில் அவா் நல்வாய்ப்பாக உயிா்தப்பினாா். போடி ஜக்கமநாயக்கன்பட்டியைச்... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு

தேனி மாவட்டத்தில் சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவினா் அரசு வளா்ச்சித் திட்டப் பணிகள், பொது நிறுவனங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து புதன்கிழமை, ஆய்வு செய்தனா். சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவின... மேலும் பார்க்க

உத்தமாளையம் தனியாா் விடுதியில் தீ: ராணுவ வீரா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் புதன்கிழமை தனியாா் தங்கும் விடுதி அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ராணுவ வீரா் உயிரிழந்தாா். உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஜெயமாருதி (2... மேலும் பார்க்க