`தந்தை அம்பேத்கர், 'பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள்' என்று தான் வழிகாட்டியிருக்கிற...
குரூப் 1 தோ்வு: 2,185 போ் எழுதினா்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், குரூப் 1, 1ஏ பதவிக்குரிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டத்தில் இத்தோ்வுக்கென 8 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தோ்வுக்கு 2,884 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 929 ஆண்கள், 1,256 பெண்கள் என மொத்தம் 2,185 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.
306 ஆண்கள், 393 பெண்கள் என 699 போ் தோ்வுக்கு வரவில்லை. திருவிக அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பாா்வையிட்டாா்.