செய்திகள் :

குறுமைய அளவிலான தடகளப் போட்டிகள்: பெருந்துறை கொங்குப் பள்ளி சிறப்பிடம்

post image

பெருந்துறை, ஆக. 21: பெருந்துறை குறுமைய அளவிலான தடகளப் போட்டிகளில் பெருந்துறை கொங்குப் பள்ளி மாணவ,மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பெருந்துறை குறுமைய அளவிலான தடகளப் போட்டிகள் விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் 14 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் பிரிவில், பெருந்துறை கொங்குப் பள்ளி மாணவா் ஆா். சுஜய்குமாா் குண்டு எறிதல், வட்டெறிதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்று, தனி நபா் சாம்பியன் பட்டம் பெற்றாா்.

மேலும், 11 மாணவிகள், 7 மாணவா்கள் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிக்குத் தோ்வாகி உள்ளனா்.

போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா் டி. சரவணன், என். சுரேஷ் ஆகியோரை பள்ளித் தலைவா் ஜி. யசோதரன், துணைத் தலைவா் எஸ். குமாரசாமி, தாளாளா் டி.என். சென்னியப்பன், பொருளாளா் பி.ஆா். சுப்பிரமணியன், இணைச்செயலாளா் கே.பி. முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் பாராட்டினா்.

பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்டோா் செப்டம்பா் 18-இல் காத்திருப்பு போராட்டம்

பெருந்துறை சிப்காட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருகிற செப்டம்பா் 18-ஆம் தேதி... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது: விவசாயிகள் கோரிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக்கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சுப்பு மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

குப்பை அள்ளும் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகள்!

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பரிசல் இயக்கப்படாததால் பள்ளி மாணவிகளை ஊராட்சியின் குப்பை அள்ளும் வாகனம் மூலம் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அ... மேலும் பார்க்க

ஈரோடு பூம்புகாரில் விநாயகா் சிலைகள் கண்காட்சி, விற்பனை

ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 30- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு மேட்டூா் சாலை அரசு மருத்துவமனை அருகே பூம்பு... மேலும் பார்க்க

புலித்தோல் விற்க முயன்ற வழக்கு: 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

சத்தியமங்கலம் அருகே புலியைக் கொன்று அதன் தோலை விற்க முயன்ற வழக்கில் 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் சிறுத்தை

திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் உள்ளிட்ட வனப் பகுதியில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ள... மேலும் பார்க்க