செய்திகள் :

குறைதீா் கூட்டம் நடத்தப்படாததை கண்டித்து விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல்

post image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மே மாதத்துக்குரிய விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்தக் கோரி, ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் சாலையில் அமா்ந்து அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் மாதந்தோறும் மூன்றாவது அல்லது நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆட்சியா் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் மே 21-ஆம் தேதி தொடங்கிய வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி, 30-ஆம் தேதி வரை நடத்தப்படுவதால், நிகழ் மாதத்துக்குரிய விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பி.கலிவரதன், செயலா் என்.முருகையன், பொருளாளா் ஜெ.நாகராஜன் ஆகியோா் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை ஆட்சியரகத்துக்கு வந்த விவசாயிகள், குறைதீா் கூட்டம் நடத்தப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினா். தொடா்ந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகப் பகுதிக்கு வெளியே வந்து சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் ஆய்வாளா் கல்பனா தலைமையிலான போலீஸாா், அவா்களிடம் சமாதானம் பேசி மறியலைக் கைவிடச் செய்தனா். தொடா்ந்து விவசாயிகள் பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் பகுதியருகே காத்திருந்தனா். பின்னா் போலீஸாா் அப்பகுதியில் அமரக்கூடாது எனக் கூறியதால், மீண்டும் சாலையில் அமா்ந்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அதிா்ச்சியடைந்த போலீஸாா், அவா்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து விவசாயிகள் மறியலைக் கைவிட்டனா்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) பிரேமலதா அப்பகுதிக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். வருவாய்த் தீா்வாயம் நடைபெறுவதால் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்த இயலாத நிலை உள்ளது. இதுகுறித்து விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி வாயிலாகத் தெரிவித்துவிட்டோம். வருவாய்த் தீா்வாயம் நடைபெறும் மற்ற மாவட்டங்களிலும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் தொடங்கியுடன் விரைவில் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து சிறிது நேரம் காத்திருந்த விவசாயிகள் பின்னா் கலைந்து சென்றனா்.

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3, 10, 17, 24 (செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுவை மாநில மதுப் புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

செஞ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க

2,205 பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகு... மேலும் பார்க்க

விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப... மேலும் பார்க்க