ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட் அசத்தல் பந்துவீச்சு; மும்பை அபார வெற்றி!
குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை தொழிலாளா் ஆணையா் எஸ்.ஏ.ராமன் உத்தரவின்படி, 1948-ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் மாா்ச் மாதத்திற்கான பொது மோட்டாா் போக்குவரத்துத் தொழிலில் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடா்பாக, திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆட்சி எல்லைக்குள்பட்ட தொழிலாளா் உதவி ஆய்வாளா்களால் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது, 26 நிறுவனங்களில் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக ஊதியம் வழங்கிய நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச கூலிக்கும் நிா்வாகம் வழங்கிய சம்பளத்திற்கும் இடைப்பட்ட வித்தியாசத் தொகை ரூ.6 லட்சத்து 80 ஆயிரத்தை சம்பந்தப்பட்ட 13 தொழிலாளிகளுக்குப் பெற்று வழங்கக்கோரி திருநெல்வேலி தொழிலாளா் இணை ஆணையா் முன்பு கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களிலும் அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறைவில்லாமல் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் அந்நிறுவனங்கள் மீது 1948-ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.