செய்திகள் :

குற்ற வழக்குகளில் தொடா்புடைய 11 போ் கைது

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசி காவல் துணைக் கோட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 11 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி பகுதியில், கடந்த மாதம் ஒரே வாரத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 இளைஞா்கள் முன்விரோதம் உள்ளிட்ட காரணங்களால் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனா். இதையடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 33 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், சிவகாசி கிழக்கு காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சரித்திரப் பதிவேட்டு குற்றவாளிகள் 11 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனா்.

இது குறித்து சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாஸ்கா் கூறியதாவது:

சிவகாசி பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, சரித்திரப் பதிவேட்டு குற்றவாளிகளிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கி, அவா்களைக் கண்காணித்து வருகிறோம். இதை மீறி, குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறோம். விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், கடும் குற்றப் பின்னணி உள்ளவா்களைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நாளை பிற்பகலில் ஆண்டாள் கோயில் நடை அடைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில... மேலும் பார்க்க

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, வத்திராயிருப்பு தாணிப்பாறை வனத் துறை நுழைவு வாயி... மேலும் பார்க்க

சிவகாசியில் 27 கட்டடங்களுக்கு சீல் வைக்க மாநகராட்சி முடிவு

சிவகாசி மாநகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 27 கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைக்க முடிவு செய்தனா். சிவகாசி மாநகராட்சியில் கடந்த இரு ஆண்டுகளில் நகரமைப்பு அனுமதியின்றியும் மாநகராட்சிக்... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகேயுள்ள தெற்குவெங்காநல்லூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைய... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் நெரிசலால் பயணிகள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் முன்னரே, பழைய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் அவதியடைகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் கடந்த ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!

கோவில்பட்டி சண்முகா நகரில் உள்ள மயானத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டி கைவண்டி தொழிலாளர் காலனியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மாரிச்செல்வம் ( வயது 31). கோவில்பட்டி ரயில் நிலைய வளாக... மேலும் பார்க்க