செய்திகள் :

குழந்தை குண்டாக இருக்கிறதா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!

post image

இப்போதைய உணவு முறை, வாழ்க்கைச் சூழல், மரபியல் காரணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதுமே உடல் பருமனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலும் உடல் பருமன் வேகமாக வளர்ந்து வரும் பிரச்னையாக இருக்கிறது. உடல் எடை அதிகரிப்பினால் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் என பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான நோய்களுக்கு உடல் பருமனே முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்நிலையில் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் உடல் பருமனால் இப்போது அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் விழிப்புணர்வு ஏற்படுத்த இதுபற்றிய முழுமையான தரவுகள் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளிடையே ஏற்படும் உடல் பருமன் குறித்து உலக சுகாதார நிறுவனமும் கவலை தெரிவித்துள்ளது. குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடும் முக்கியக் காரணம் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

இதையும் படிக்க | புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய்! காரணம் என்ன?

"கடந்த இரு தசாப்தங்களாக நகரமயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சி காரணமாக குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கம் மாறியுள்ளது. துரித உணவு, பொருந்தா உணவு, அதிக சர்க்கரை மிகுந்த குளிர்பானங்கள், அதிகம் பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள் என அதிக கலோரி கொண்ட உணவுகளைக் குழந்தைகள் அதிகம் சாப்பிடுகின்றனர். இது சந்தையில் எளிதாகவும் குறைந்த விலைகளிலும் கிடைப்பதால் அதிகம் பயன்பாட்டில் உள்ளது" என்று ஆஸ்தர் சிஎம்ஐ மருத்துவமனையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் பரிமளா திருமலேஷ் கூறுகிறார்.

அதேநேரத்தில் டிஜிட்டல் சாதனங்களின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டினாலும் பள்ளிகளில் அதிக நேர வகுப்பினால் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலையாலும் குழந்தைகள் விளையாடுவது இன்றைய காலகட்டத்தில் குறைந்துவிட்டதும் காரணம் என்று கூறுகிறார்.

குழந்தைகளிடையே உடல் பருமனால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நீண்டகால நோய்கள் சிறு வயதிலேயே ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கும் மருத்துவர், ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வி இல்லாததே இதற்கு முக்கியக் காரணம் என்றும் கூறியிருக்கிறார்.

Obesity,

கடந்த பத்தாண்டுகளில் குழந்தைகளிடையே உடல் பருமன் இரு மடங்கு அதிகரித்துவிட்டதாக பல்வேறு அமைப்புகள் நடத்திய ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளைவிட நகர்ப்புறங்களில்தான் பாதிப்பு அதிகமுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் டாக்டர் பரிமளா இதுகுறித்து கூறுகையில் "விற்கப்படும் உடலுக்கு நல்லது என்று சந்தைகளில் மார்க்கெட்டிங் உத்திகளுடன் விற்கப்படும் உணவுப் பொருள்களை பெற்றோர்களும் நம்பி, குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கின்றனர். ஆனால், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை, கெட்ட கொழுப்புகள், பதப்படுத்த உதவும் ரசாயனங்கள் அதிகம் சேர்க்கப்படுகின்றன.

அதேபோல குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடும் உடல் பருமனுக்கு காரணமாகிறது. பள்ளிகளில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு, குழந்தைகளை விளையாடுவதற்கு ஊக்கப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் வேண்டும். மாறாக பள்ளிகளில் உள்ள கேன்டீன்களிலே பதப்படுத்தப்பட்ட அல்லது பொருந்தா உணவுகள்தான் அதிகம் விற்கப்படுவது கவலைக்குரிய விஷயம்.

கடைகளில் பாக்கெட் உணவுப் பொருள்களின் விலை குறைவாக இருப்பதால், நடுத்தர வருமானம் கொண்ட பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு அதனை எளிதாக வாங்கிக் கொடுத்துவிடுகின்றனர். இதனால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் உடல் பருமன் ஏற்படுகிறது" என்றார்.

இதையும் படிக்க | கர்ப்பிணிகளிடையே அதிகரிக்கும் தைராய்டு! காரணங்கள், சிகிச்சைகள் என்னென்ன?

ஃபோர்டிஸ் மருத்துவமனையின் வயிறு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.என். ராம்ராஜ் கூறுகையில், "நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் குழந்தைகளிடையே உடல் பருமன் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகிறது.

உடல் பருமனால் சுகாதார பிரச்னைகள் அதிகமாகி வருவதால், இதனை ஒரு தீவிரமான சுகாதார சவாலாக அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் இதுகுறித்த தரவுகள் முழுமையாக இல்லை என்பதால் இதனைத் தடுக்கும் நடவடிக்கைகள் சவாலாக உள்ளது" என்றார்.

மேலும், குழந்தைகளிடையே ஏற்படும் உடல் பருமனைத் தடுக்க பள்ளிகள், சுகாதார மையங்கள், சமூக நலத் திட்டங்கள் மூலமாக குழந்தைகளின் உடல்நிலை குறிப்பாக உடல் பருமனைக் கண்காணிப்பது அவசியம் என்றும் இது அவசர நிலையாக மாறுவதற்கு முன், விழிப்புணர்வு, சந்தைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை விற்கும் விதிகளில் மாற்றம் என தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமானது என்று சுட்டிக்காட்டுகிறார்.

அவ்வாறு இல்லையெனில் அடுத்த மருத்துவ அவசர நிலையாக உடல் பருமன் மாறும் என்றும் இதனால் இறப்புகள்கூட ஏற்படலாம் என்றும் எச்சரிக்கிறார்.

இறுதியாக, தொற்றுநோய்களைப் போலவே குழந்தைகளிடையே ஏற்படும் உடல் பருமன், மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கும் மருத்துவர்கள், பெற்றோர்கள் இதுகுறித்த விழிப்புணர்வுடன் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தர வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.

தொற்றுநோய்கள் குறிப்பிட்ட காலங்களில் மறையக்கூடியவை என்றும் ஆனால் உடல் பருமன், அடுத்தடுத்த படிப்படியான சிக்கல்களை அமைதியாக ஏற்படுத்துவதால் சுகாதாரத் துறைகள் உடல் பருமன் பற்றிய தரவுகளை சேகரித்து அடுத்த இளைய தலைமுறையை இதிலிருந்து காப்பாற்ற வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகின்றனர்.

இதையும் படிக்க | பொரித்த உணவுகளைச் சாப்பிடுகிறீர்களா? எண்ணெய் பற்றிய கவனம் தேவை!

வெந்நீர் குடித்தால் தொப்பை குறையுமா?

வெந்நீர் குடித்தால் உடல் எடை குறையும் என்று சிலர் நம்புகின்றனர். இது உண்மைதானா?உடல் பருமன் பிரச்னை குறித்து இப்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாக இருப்பது உடல் பர... மேலும் பார்க்க

குழந்தைகளின் மன அழுத்தம், பாலியல் துன்புறுத்தல்... பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன? - மருத்துவர் பதில்!

- டாக்டர் அபிலாஷா இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளிடம் பதட்டம் ஒருபக்கம், பள்ளி, பெற்றோர்கள், சமூகம் தருகின்ற அழுத்தங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கிறது. பொதுத்தேர்வு என்று வந்தாலே எப்போதுமே நன்றாகப் படிக்... மேலும் பார்க்க

மாதவிடாய், கர்ப்பம், தாய்மை: பெண்களின் பிரச்னைகள் என்னென்ன? - மருத்துவரின் ஆலோசனைகள்!

- டாக்டர் ரேவதி அனந்த்ஒரு பெண் ஒரு குழந்தையை பெற்றெடுக்கும்போது முதலில் ஒரு தாயாக இருப்பதை பெருமையாக நினைக்க வேண்டும். தாயைப்போல பெருமையாக நினைக்க வேண்டிய விஷயம் எதுவுமில்லை. யாரும் செய்ய முடியாததை பெ... மேலும் பார்க்க

புதிய கரோனா வைரஸ் முதியோர்களை அதிகம் பாதிக்கிறதா? - நம்பிக்கையும் உண்மையும்!

செல்லப்பிராணிகள் மூலமாக புதிய கரோனா வைரஸ் பரவுகிறதா? முதியோர்களை அதிகமாக இந்த வைரஸ் பாதிக்கிறதா?சீனாவில் புதிதாகப் பரவி வரும் புதிய கரோனா வைரஸ்(HKU5-CoV-2) குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கி... மேலும் பார்க்க

இந்தியர்கள் தங்கள் ஊதியத்தில் செலுத்தும் இ.எம்.ஐ. எவ்வளவு தெரியுமா?

இந்தியர்கள் தங்கள் ஊதியத்தை எவ்வாறு செலவு செய்கின்றனர், எவ்வளவு தொகையை மாதத் தவணையாக செலுத்துகின்றனர் என புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.சமீபகாலமாக சம்பாதிப்பதற்கு ஏற்ப கடன் வாங்குவதும் மக்களிடைய... மேலும் பார்க்க

புகைப்பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய்! காரணம் என்ன?

புகைப்பிடிக்காதவர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் அதற்கான காரணம் குறித்தும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.லான்செட் மருத்துவ இதழில் இந்த ஆய்வின் ... மேலும் பார்க்க