செய்திகள் :

குழந்தைகளை தன்னிச்சையாக தத்தெடுத்தால் நடவடிக்கை: என்எம்சி எச்சரிக்கை

post image

பெற்றோரால் கைவிடப்படும் அல்லது ஒப்படைக்கப்படும் குழந்தைகளை தன்னிச்சையாக தத்தெடுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு:

மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட நிலையில் கண்டறியப்படும் குழந்தைகள் குறித்தும், பிறரால் கொண்டு வந்து ஒப்படைக்கப்படும் குழந்தைகள் குறித்தும் சட்டவிதிகளின்படி தகவல்கள் அளிக்கப்படுவதில்லை என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் என்எம்சி-க்கு கடிதம் எழுதியிருந்தது.

அதேபோன்று அந்தக் குழந்தைகளை உரிய விதிகளுக்கு உட்படாமல் தத்தெடுக்கும் நிகழ்வுகள் நடப்பதாகவும் அதில் தெரிவித்திருந்தது.

எந்த ஒரு தனி நபருக்கோ, நிறுவனத்துக்கோ, மருத்துவமனைக்கோ கைவிடப்பட்ட நிலையில் ஆதரவற்ற குழந்தைகள் இருப்பது தெரியவந்தால் அதுகுறித்து குழந்தைகள் உதவி மையம் (1098), குழந்தைகள் நலக் குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிப்பது கட்டாயம்.

அதேபோன்று, தங்களது குழந்தையை வளா்க்க இயலாமல், ஒப்படைக்க பெற்றோா் முன்வந்தால் அதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் குழந்தைகள் நல குழுவுக்கு தகவலளிக்க வேண்டும்.

குழந்தைகளை முறைப்படி தத்தெடுக்க உரிய பதிவு அவசியம். ஆவணங்களின்படியும், பதிவு மூப்பு அடிப்படையிலும் அவா்களுக்கு குழந்தைகள் தத்து கொடுக்கப்படும். இந்த விதிகளை மீறி தன்னிச்சையாக குழந்தைகளை தத்தெடுப்பது சட்டப்படி குற்றம்.

மேலும், பணத்துக்கோ, பொருளுக்கோ குழந்தைகளை விற்பனை செய்வதும் தீவிர குற்றச் செயலாக பாா்க்கப்படுகிறது. இந்தச் செயல்களில் ஈடுபட்டாலும், கைவிடப்பட்ட குழந்தைகள் குறித்து தகவலளிக்காவிட்டாலும் உரிய சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

அதைக் கருத்தில் கொண்டு அனைத்து மருத்துவமனைகளும் இதுதொடா்பான பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களையும் தங்களது ஊழியா்களுக்கு வழங்க வேண்டும். குறிப்பாக, மகப்பேறு மருத்துவப் பிரிவில் உள்ளவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல் அவசியம்.

அதுமட்டுமல்லாது, இது தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள், பதாகைகளை மருத்துவமனை வளாகத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க